c77c5c1c-e436-4f13-ad75-23331f1243e8

கவிதை வருவது கண்ணன் அருளா ?
செவியுண்ட செய்யுள் செயலா ?-புவியத்தா
காவிய வாழ்க்கையா? கைவல்ய வேட்கையா?
சாவியுன் கையில் செப்பு….

பார்த்தோர் பசுமையாய் பாராதோர் பூதமாய்
சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய் -ஆர்த்தொலிக்கும்(சத்தமிடும்)
சங்கில் மவுனமாய் சக்கரத்தில் சீற்றமாய்
எங்கும் திகழ்வோனை ஏத்து….
மெய்யே அகலாக மேவுமுயிர் நெய்யாக
உய்யுமோர் ஆன்மன் ஒளியாக -அய்யநின்
ஆரா தனையல்லால் வேறே துமெண்ணாத
சீரான வாழ்வில் செலுத்து….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *