மீ.விசுவநாதன் 

 

எங்கெங்கோ பறந்தோடி எடுத்த சுள்ளி

இப்படியும் அப்படியும் அடுக்கி வைத்து

தங்குவதற் கானகூடு பறவை செய்யும் !

தகிக்கின்ற நல்வெயிலும் மழையும் கண்டும்

தங்களது உறவுகளை நன்றாய்ப் பேணும் !

தவிக்கின்ற தன்குஞ்சு வாயில் ஊட்டி

உங்களுக்கு நானிருக்கேன் என்று சொல்லி

உடல்முழுதும் அலகாலே வருடிக் கொஞ்சும் ! 

 

வாசலிலே போடுகிற அரிசிச் சோறு

வாய்க்குள்ளே வைத்தபடி காதல் பேசும்

பாசமுள்ள குருவிகளைப் பார்க்கும் போது

பாசத்தைப் பணத்திற்காய்க் கொன்று போடும்

தூசுபெறா மனிதகுணம் வெட்கிப் போகும் !

துன்பத்தில் தன்னினத்தைத் தழுவிக் கொண்டு

மாசுவராக் கருணையாலே இணைந்து வாழும்

வாயில்லாப் பிராணிகளை வணங்கு கின்றேன் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *