உமையாள் திருப்புகழ் – 3
வித்தக இளங்கவி
விவேக்பாரதி
விவேக்பாரதி
தனன தனனனா தத்தன தத்தன
…தனன தனனனா தத்தன தத்தன
……தனன தனனனா தத்தன தத்தன – தனதானா !
அருளி லடியவ ருற்றிடு மத்துய
…ரதுவு மழிவுற வைத்திடு மத்தனி
…..னரசி பதகம லத்தினைப் பற்றுக – தினமோடி !
அரச மகளெனத் ! தச்சனி னற்புத
…அழகு மகவென ! இப்புவி மெச்சுற
……அரணின் தவமதை முற்றிட வைத்தவ – னுடல்சேரக்
கருமை நிறமதை யுற்றிட, அத்தனைக்
…கடலொ டுலகுப டைப்பவ னுக்கொரு
…..கடுமை தவமதி யற்றிய சக்தியைப் – பணிவோமே !
கரும வினையதை முற்றுமெ ரிப்பவள்
…களப விழியருள் முக்திய ளிப்பவள்
…..கவலை உடையவ ரத்துய ரெத்திடு – முமையாளே !