கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”பெருந்தாய் அழைத்திட பாற்கடல் விட்டு
விருந்தா வனத்திற்க்கு வந்தான் -கருந்தா
மரைக்கண்ணன் மாதவன் மாம்பழ வாயன்
தரைக்குவந்த தாமோ தரன்’’….கிரேசி மோகன்….
வழக்கமாக ‘’பழம் நழுவிப் பாலில் விழும்’’
இங்கோ ‘’பாலில்(பாற்கடலில்) இருந்த பழம்
நழுவி’’ யசோதையிடம் வந்தது….
‘’மாம்பழ வாயினிலே குழலிசை வன்மை புகழ்ந்திடுவோம்’’
’’கண்ணன் என் தோழன்’’ என்ற மகாகவி பாரதியாரின் பிரயோகம்….
வாயடைத்த மல்கோவா -யசோதை வாய் பிளந்து காண
அந்த வாயடைக்க விஸ்வரூபம் காட்டிய வள்ளல்(பேகனே) கண்ணன்….
”பாம்பணைப்பை விட்டு பரிவோ(டு) அழைக்கின்ற
தாம்பணைப்பில் வாழத் தயரானான்(தாயாரால்) -மாம்பழ
வாயன் மகாகவி(பாரதியார்) தோழன் யசோதையின்
வாயடைத்த மல்கோவா விஷ்ணு’’….கிரேசி மோகன்….