மீ.விசுவநாதன்

விபாண்டகமகரிஷி சிவலிங்க வடிவாக

சிவனே சிவனே உனைத்தேடி – நான்

சிவலோகம் வரலாமா?

மகனே மகனே வரவேண்டாம் – உன்

மனம்தானே சிவலோகம் !

அரனே அரனே உன்மேனி – எழில்

அரவாய்நான் வரலாமா?

அசடே அசடே வரவேண்டாம் -“நா”

அசைவுதானே அரவுருவம் !

அருவும் உருவும் இல்லானே – உனை

அறிந்திடவே முடியாதா ?

இருளில் இருந்து வெளியேவா – என்

இருப்பைத்தான் அறிவாய்நீ !

பஞ்ச பூத வடிவோனே – உன்

பயனென்ன உரைப்பாயா ?

கொஞ்சம் வயது போகட்டும் – உன்

குணநலனால் தெளிவாய்நீ !

(இன்று பிரதோஷ தினம் :  31.07.2016)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *