மலர்சபா

*மதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை*

ama

அங்ஙனம் அவள் எறிந்த நேரத்தில்
நீல நிறத்தையும்
செந்நிறமான நீண்ட சடையையும்
பாலைப் போன்ற
வெள்ளிய எயிற்றையும் உடைய
பார்ப்பன வடிவத்துடன்
நன்றாக இருக்கின்ற
எதையும் எரிக்க வல்ல
தீக்கடவுள் வெளியே வந்து,
“நிறைந்த கற்புடையவளே!
இந்நகர் உனக்கு மிகவும் தவறிழைத்துவிட்டது.
பரந்த நெருப்புக்கு
இந்நகரை இரையாக்கும் ஏவலை
நான் முன்னரே பெற்றுள்ளேன்.
இங்கே யார் மட்டும் பிழைத்திருக்க வேண்டும்?”எனக் கண்ணகியைக் கேட்டது.

*கண்ணகியின் கட்டளையால் மதுரையில் தீ எழல்*

அந்தணர் அறவோர் பசுக்கள்
பத்தினிப் பெண்டிர்
வயதில் முதிர்ந்தோர் குழந்தைகள்
ஆகிய இவர்கள் தவிர்த்து,
தீய தன்மையுடையவர்களை மட்டும்
அழித்து நிற்பாயாக” எனக் கண்ணகி ஏவியதும்
அத்தீக்கடவுள், தேரையுடைய பாண்டியன் நகர் நோக்கித்
தீயை முடுக்கிவிட
நகர் எங்கும் புகை மண்டியது.

*வெண்பா*

சிறப்புடைய மன்னவனும்
மகளிரும் மாளிகையும்
விற்படை வேழப்படையும்
கண்ணகியின் கற்புத்தீ சுட்டெரித்தது.
தீமை நல்கிய கூடல் நகர்
தீயில் கருகியது.

*வஞ்சினமாலை முற்றியது*

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *