புற்று நோயை ஜெயித்த பெண்மணி
ஸ்ரீதரன்
காப்பாற்ற முடியாத நோய் புற்று நோய்.. திருமதி வேதவல்லி பார்த்தசாரதி புற்று நோயிலிருந்து ( 3வது ஸ்டேஜ்) மீண்டு வந்து 15 ஆண்டுகள் ஆகி விட்ட்து.. 32 கீமோதெரபி செய்து தலை மயிர் எல்லாம் போய் மொட்டை அடித்தது போன்ற தலையுடன் இருந்தவர் அவருடைய பாஸிடிவ் அப்ரோச் மூலம் . புற்று நோய் பாதிக்கப் பட்டவர்களுக்கு யோகா மூலம் மனவலிமை கிடைக்க உதவி செய்கிறார்.. புற்று நோயின் பயத்தைப் போக்கவும். நோயை நீக்கவும் உதவி செய்கிறார். அவரிடம் சில கேள்விகள். அதற்கு அவர் கொடுத்த பதில்கள் ;
- புற்று நோய் பயமுறுத்தும் நோய் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஆரம்பத்தில் எனக்குப் புற்று நோய் வந்த போது அப்படி நினைத்தேன். இப்போது இல்லை.
- புற்று நோய் வந்து விட்ட்து என்று அறிந்ததும் உங்கள் மனநிலை எப்படி இருந்தது.?
அதிக அச்சமாய் இருந்தது. எனக்குப் போய் புற்று நோய் வந்து விட்டதே என்று கவலைப்பட்டேன். அப்போது என்னுடைய குழந்தைகள் முதல் வகுப்பு, மூன்றாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் விட்டு விட்டு போக வேண்டுமோ என்று மிகவும் பயமாய் இருந்தது.
- அப்போது ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து எப்படி வெளியே வ்ந்தீர்கள் ?
டாக்டர் மற்றும் யோகா கொடுத்த தைர்யம், மனபலம் . யோகாவின் மூலம் என்னை நானே செதுக்கிக்கொண்டேன். நீ நல்லாயிடுவே, நீ நல்லாயிடுவே என்று பல முறை என் மனதில் சொல்லிக் கொண்டேன். சுய நம்பிக்கை மூலம் மன அழுத்தத்திலிருந்து வெளியே வந்தேன். யோகா குரு சிவரிஷிக்கு என் நன்றியைச் சொல்ல வேண்டும்.
4.யோகாவால் புற்றுநோய் குணப்படுத்தமுடியும் என்று எப்படி தெரிந்தது ?
யோகா புற்று நோய் குணம் ஆக சப்போர்ட் செய்யும். என்னுடைய ரேடியேஷன் டாக்டர் சுமன்தா பிரேம்குமார் கொடுத்த அறிவுரைப்படி யோகாவைப் பயிற்சி செய்தேன்.
புற்று நோயைக் குணப்படுத்தத் தேவையானவை
- மருந்து
- பாசிடிவ் எண்ணம். உடைந்து போக மாட்டோம் என்னும் நம்பிக்கை . இதை யோகா மூலம் பெறமுடியும்..
- மற்றவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி தோன்றியது?
நான் பட்ட வேதனையை மற்றவர்கள் படக்கூடாது என்று நினைத்ததால் என்னால் முடிந்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். அப்போது ஃபோர்டு கம்பெனியில் ஏரியா சேல்ஸ் மேனேஜராக இருந்தேன். சேவை செயவதற்காக வேலையை விட்டு விட்டு “வீ கேன் கேர்“ என்னும் அமைப்பை ஆரம்பித்தேன். ஹெல்ப் லைன் நெம்பர் – 9841053435 .
- வீ கேன் கேர் அமைப்பின் நோக்கத்தைக் கூறவும்
- போன் சப்போர்ட்
- மாரல் சப்போர்ட்
- யோகிக் சப்போர்ட்
- வீ கேன் கேர் இதுவரை செய்த தொண்டைப் பற்றி கூறவும்?
வீ கேன் கேர் இதுவரை எண்ணற்ற புற்று நோயாளிகளுக்கு கவுன்சலிங், கொடுத்திருக்கிறது. மாரல் சப்போர்ட் கொடுத்திருக்கிறது. புற்று நோயிலிருந்து குணம் அடைந்தவர்களும் இந்த அமைப்பில் வாலண்டியராக சேவை செய்கிறார்கள்.
- புற்று நோய் வந்தவர்களுக்கு எவ்வாறு ஆறுதல் சொல்ல வேண்டும்.?
- பேசணும்
- பேச வைக்கணும்
- மனதில் ஏற்பட்ட அழுத்தத்தைக் குறைக்க உதவி செய்ய வேண்டும்.
- புற்று நோய் வந்தவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?
- தைர்யமாய் இருக்க வேண்டும்,.
- துவண்டு போய் விடக் கூடாது.
- மன அழுத்தத்திலிருந்து வெளி வர முயல வேண்டும்.
- புற்று நோய் வருவதை தடுக்க என்னவிதமான தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.?
- நல்ல மனநிலையை மெயிண்டெயின் செய்ய வேண்டும்
- மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- புற்று நோய் வந்தவர்களுக்கு நீங்கள ஏதாவது கூற விரும்புகிறீர்களா?
அவர்கள் தைர்யமாக இருக்க வேண்டும் . ஒரு கூண்டுக்குள் அடைப்பட்டுக்கிடக்காமல் மேலேறி வர முடியும் என்னும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
பி.கு. உதவி வேண்டியவர்கள் 996 251 7790 என்ற மொபல் நெம்பருக்கு தொடர்பு கொள்ளவும் .
&&&&&&&&&&
நம்பிக்கை அளிக்கும் தொண்டு. புற்றுநோயிலிருந்து மீண்ட திருமதி வேதவல்லி பார்த்தசாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்.