பாடிப்பணிவோம்
சரஸ்வதிராசேந்திரன்
கொண்டை மயில் சீவி
குழலூதும் கண்ணா
கோபியர் கொஞ்சும்
கோகுல கிருஷ்ணா
மாய லீலை செய்யும்
ஆயர்பாடி கண்ணா
கேட்டதை கொடுக்கும்
கீதையின் நாயகா
குருவாயூரில் நிற்கும்
குழந்தை கண்ணா
மதுராவில் பிறந்து
கோகுலத்தில் வளர்ந்து
துவாரகையை ஆண்டவனே
குன்றம் ஏந்தியே
குளிர் மழை காத்து
பசுக்கூட்டதைக் காத்தவனே
கமலம் போன்றகண்ணா
கண்ணாய் இருந்து காப்பவனே
உன் வேய்குழலின் நாதம்
வீசி வரும் கீதம்
எங்களுக்கு வேதம்
பாடிப்பணிவோம் உன் பாதம்
என் கண்ணன் கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி–சரஸ்வதிராசேந்திரன்