கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிஷ்கிந்தா மந்திகள் முன்பு ராமர் பாலத்திற்காய்(சேது பாலம்)
மண்,கல் சுமந்தபோது, ஒரு அணிலும் மண்
சுமந்தது….ராமர் அதன் முதுகில் பரிவாகப் பின்கோடிட்டார்….
அன்னை மிரட்டலுக்கு பயந்தது போல் நடித்து,
‘’ராமனாய் வந்த கண்ணன் தன்னை அணிலின் அவதாரம்
என்று சொல்லி அன்னையை ஏமாற்றுகிறான்….அதை நம்பாமல்
யசோதை வாய்திறக்கச் சொல்ல அன்னைக்கு வாய்க்குள்
அகிலத்தைக் காட்டியது கண்ணன் லீலை….!சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து….!
”மந்திகோள் மாதாமுன் மூட்ட மணல்தெருச்
சந்தியில் உண்டவன் சாகஸம்: -சந்திர
வம்சத்தோன்(கண்ணன்) சூரிய வம்சத்து(ராமர்) சேதுவிற்காய்(சேது பாலம்)
அம்ஸயித்த கண்ணன் அணில்’’….கிரேசி மோகன்….!
அம்ஸயித்தல் -ஆண்டவனுக்கு உணவு அர்பணித்தல்….
இவ்விடம் ஆண்டவனுக்கு(ராமருக்கு) ஆண்டவனே(கண்ணனே)
அம்ஸயித்தல் பெரிய கடவுள் போல ‘’பெரிய பிரசாதம்’’….!யோசிக்க வைத்த
‘’கேசவ்வுக்கு” நன்றி….!