எம் . ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்திரேலியா 

 

வீரத்துறவியே நெஞ்சிலே ஆன்மீக

சாரத்தை நிறைத்தவரே

பாருக்கு வேராகி பக்குவத்தை

ஊருக்கு உரைத்தவரே

ஞானத்தின் திருவுருவே வாழ்வில்

மோனத்தைக் கண்டவரே

நால் வேதத்தை உள்வாங்கி

நல்வாழ்வுக்கு அளித்தவரே !

 

பாரதத்தாய்  ஈன்றெடுத்த பண்புளமே

பார்வியக்க பலபகன்ற பகலவரே

ஊரலைந்து நெறிவளர்த்த உத்தமரே

உண்மையினை உணரத் துடித்தவரே

சீரான குருதேடித் திருந்தவரே

சிறப்புடனே உபதேசம் பெற்றவரே

பாரைவிட்டு விரைவாக சென்றவரே

பார்பிழைக்க அழைக்கின்றோம் வருவீரா !

 

சமயநெறி அத்தனையும் பார்த்துவிட்டு

சரியான நெறிதேர்ந்து சொன்னவரே

சராசரி சாமியார் தமைவெறுத்து

சன்மார்க்க தொண்டனாய் நின்றவரே

உலகினுக்கு புதுக்கருத்தை உரைத்தவரே

ஒவ்வாத அத்தனையும் வெறுத்தவரே

நிலவுலகில் நிலையாக நிலைத்தவரே

நீழ்புவியை காத்துவிட  வருவீரா !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *