வெற்றி விநாயகனே
ரா.பார்த்தசாரதி
பிரணவ மந்திரத்தின் முதலோனே
வீனைதீர்க்கும் விநாயகப் பெருமானே ,
சங்கடங்கள் தீர்க்கும் இறைவனே
வேழ முகத்தோடு காட்சியளிப்பவனே
அரக்கனை அழித்து மக்களை காப்பாற்றியவனே ,
மஹாபாரதத்தை வியாசருடன் எழுதியவனே,
திருமாலின் மூத்த மருமகனே
முருகனின் மூத்த சகோதரனே
அவ்வை பிராட்டிக்கு அருள் புரிந்தவனே
கடவுள் எல்லாவற்றிலும் மிக எளியவனே
வீதியெங்கும் எளிமையாய் காட்சியளிப்பவனே
சதுர்த்தியில் பிறந்து, சங்கடங்களை போக்குபவனே,
உன் அருளை வேண்டுகின்றோம் வெற்றி விநாயகனே !