ரா.பார்த்தசாரதி

 

தானத்திலே  சிறந்தது அன்னதானம்

தானத்திலே சிறந்தது ரத்ததானம்

தானத்திலே  சிறந்தது  கண் தானம்

இம்மூன்று  தானங்களும் சிறந்ததே

இவ்வுலகில்  இன்றும் நடக்கின்றதே !

அன்னதானம் பசியினைப் போக்கும்,

இரத்ததானம்  உயிரினை   காக்கும் ,

கண்தானம்   பார்வையை  அளிக்கும் !

கண்ணாலே  காதல் மலரும்

கண்ணே இரக்கத்தை உண்டாக்கும்

இயற்கையின் எழிலை  ரசிக்கும்

இறந்தபின்னும்  புகழ் சேர்க்கும்

மனித வாழ்வினை ஒளிபெறச் செய்யும்

கண் தானமே மனிதனுக்கு பெருமை சேர்க்கும்!

கண் தானம் செய்வீர் ! அவனியில் சிறப்படைவீர் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *