கண் தானம்
ரா.பார்த்தசாரதி
தானத்திலே சிறந்தது அன்னதானம்
தானத்திலே சிறந்தது ரத்ததானம்
தானத்திலே சிறந்தது கண் தானம்
இம்மூன்று தானங்களும் சிறந்ததே
இவ்வுலகில் இன்றும் நடக்கின்றதே !
அன்னதானம் பசியினைப் போக்கும்,
இரத்ததானம் உயிரினை காக்கும் ,
கண்தானம் பார்வையை அளிக்கும் !
கண்ணாலே காதல் மலரும்
கண்ணே இரக்கத்தை உண்டாக்கும்
இயற்கையின் எழிலை ரசிக்கும்
இறந்தபின்னும் புகழ் சேர்க்கும்
மனித வாழ்வினை ஒளிபெறச் செய்யும்
கண் தானமே மனிதனுக்கு பெருமை சேர்க்கும்!
கண் தானம் செய்வீர் ! அவனியில் சிறப்படைவீர் !