கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
——————————————-
”காப்புக் கரம்கொண்டு காதைப் பிடித்துமால்
தோப்புக் கரணமிடத் தீர்ப்பளித்தோய் – யாப்பெனெக்(கு)
அந்தாதி வெண்பாவில் அம்மான்(கண்ணன்) புகழ்பாட(பாரதத்தை)
தந்தம்ஒடித்த தெய்வம் துணை”….
”cowசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
mouseயிக வாகனா மோதகா -houseனுள்
வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
தாராய் அறிவில் தெளிவு”….
‘HAPPY VINAYAGA CHADURTHTHY”….!
————————————————————–
’’வினாஅகமாய் நானார் விசாரிக்க வரமாய்
வினாயகம் தோன்றும் விடையாய்: -கணாத்யக்ஷன்
ஆனந்த ரூபமாய், ஆன்ம சதுர்த்தியாய்,
ஊனம் தனைப்போக்கும் ‘’ஊ’’(பிள்ளையார் சுழி)…
’’அய்யர் வினாயகர், அய்யங்கார் விஷ்வசேனர்(விஷ்வக்சேனர் என்றுதான் பேர்….சீருக்காக ‘’க்’’கை விட்டுவிட்டேன்)
மெய்யிலே ஓங்கார மேனியர், -கையில்
ஒடித்த மருப்பதால் ஓராயிரம் செய்யுள்(Dictated by வேத வியாசர்….!)
வடித்தவர் பாக வதர்’’….கிரேசி மோகன்….!
மருப்பு -தந்தம்….!