க. பாலசுப்பிரமணியன்

பார்வையும் பொருளும்

education-1

கற்றலில் மூளை எப்படிப்பட்ட விந்தையான செயல்களை மிகவும் எளிதாகவும் துல்லியமாகவும் ஓவ்வொருவருக்கும் தனிப்பட்ட  முறையிலும் செய்கின்றது என்பதை அறிந்தால் இதற்குப் பின் இருக்கும் சக்தியின் வளமையை நாம் கணிக்கவே முடியாது.!

நாம் ஏதாவது ஒரு பொருளைப் பார்த்ததும் அந்தப் பொருளின் பரிமாணங்களையும் அதன் தேவைகளையும் அதன் தாக்கங்களையும் அதனுடன் சம்பந்தப்பட்ட உணர்வுகளையும் மூளை நமக்கு ஒரு நொடியின் மிகச்சிறிய விழுக்காட்டில் அள்ளித்தருகிறது. ஆனால் நாம் பார்க்கும் பொருளின் உண்மையான பதிவு நமக்கு கிடைக்கிறதா என்றால் “அது கிடைப்பதில்லை” என இந்தத் துறையைச் சார்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு பொருளை நாம் பார்க்கும் பொழுது அதன் பரிமாணங்கள், நிறம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட கண்ணுக்குத் தெரியக்கூடிய உள்ளீட்டுக்கள் அனைத்தும் நமது கண்கள் வழியே கண் திரைகளில் விழுந்து மின் அதிர்வுகளாக மாறி மூளையின் பல இடங்களுக்குச் செல்கின்றது.

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் படி இது மூளையின் கிட்டத்தட்ட முப்பது விழி சார்ந்த இடங்களுக்குச் சென்று பதிவாகி மீண்டும் ஒருங்கிணைந்து முந்திய அறிவுப் பதிவுகளுடன் ஒப்பிடப்பட்டு பொருள் அறியப்பட்டு அதனுடன் இணைந்த உணர்வுக் கலவைகளுடன் நமக்குத் திரும்பி வரும்பொழுது – ‘பார்த்த பொருள் இப்படி இருக்கிறது ‘ என்ற ஒரு கருத்துடன் கிடைக்கின்றது. ஆகவே மூளை நமக்குத் திருப்பித் தருவது பார்த்த பொருளின் ஒரு உருவாக்கமே தவிர அதன் உண்மையான வடிவம் இல்லை. இதுவே பார்ப்பதற்கும் அறிவதற்கும் உள்ள வித்தியாசம் .: என அறிஞர்கள் உரைக்கின்றனர். (Seeing is not knowing) ‘EYES ARE NOT UNIQUE TO US. BUT VISION DOES NOT OCCUR IN THE EYE. IT OCCURS IN THE BRAIN’ என்று கூறுகின்றார் மூளை அறிவியல் வல்லுநர் முனைவர். வீ. எஸ். ராமச்சந்திரன்.

“The brain creates symbolic descriptions. It does not re-create the original image, but represents the various features and aspects of the image in totally new terms – not with squiggles of ink, of course, but in its own alphabet of nerve impulses. These symbolic encodings are created partly in your retina itself, but mostly in your brain.Once there, they are parceled and transformed and combined in the extensive network of visual brain areas that eventually let you recognize the objects.” (Source: Tell- Tale Brain; Dr. V.S. Ramachandra )

மூளை பார்க்கப்பட்ட பொருளின் அடையாள வர்ணனைகளை மட்டும் உருவாக்குகின்றது. அது நிஜமான படத்தை தருவதில்லை. அது நிஜத்தின் பலவிதப்பட்ட பரிமாணங்களையும் அமைப்புகளையும் உருவாக்கி தன்னுடைய நரம்புத் தூண்டுதல்கள் வழியாக ஒரு புதிய மொழியாக அறிமுகப் படுத்துகிறது. இந்த அடையாள வர்ணனைகள் ஒரு பகுதி விழித்திரையிலேயே உருவாகிவிடுகிறது. ஆனால் மிகுதியான பகுதிகள் மூளையில் தான் உருவாகின்றது. அங்கே அந்த நரம்புத் தூண்டுதல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மாற்றியமைக்கப்பட்டு பரவலான கருத்தாக உருவாக்கப்பட்டு விழியின் வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு நமக்கு அறிந்துகொள்ள பொருளாக தரப்படுகின்றது.

இத்தனை வேலைகள் நடப்பதற்கு மூளை எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு இமையசைவின் நேரத்தில் பல்லாயிரம் பகுதிகளில் ஒரு சிறிய விழுக்காடு ஆகும். என்னே இயற்கையின் விந்தை.. !

இத்தனையும் நடக்கும் பொழுது மூளையில் உள்ள அமிக்டாலா AMYGDALE என்ற பகுதி அந்தப்பொருளுக்கான உணர்வுகளையும் நமக்கு இணைத்தே வழங்குகின்றது. ஆகவேதான் ஒரு பொருளைப் பார்க்கும் பொழுது அதனுடன் இணைந்த வியப்பு, அருவருப்பு, கோபம், துயரம், ஆச்சரியம் போன்ற பலவித உணர்வுகளும் நமக்கு உள்ளிருந்து கிடைக்கின்றன. ஆகவே கற்றல் ஒரு உணர்வு பூர்வமான செயல்.

பார்த்த பொருளுக்கான கருத்தை மூளை எவ்வாறு உருவாக்குகின்றது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *