சக்தியின் பித்திலிருந்து தப்புவது கடினம்!

0

-கவியோகி வேதம்

அப்பனே! மெத்தக் கடினம்! – தியான
  –ஆளுகைச் சுற்றில்நீ வந்தாலே! (அப்பனே)
வெப்பமும் ஆவியும் போலே – சக்தி
 –விரலுக்குள் உன்னைப்பிடிப் பாளே!

நித்தமும் மூச்சைப் பிடிப்பாய்! — சக்கர
 –நீள்சுகம் அங்க னுபவிப்பாய்! – அவள்
கொத்தாய்உன் மேனி  பிடிப்பாள்! – பேசிக்
 –கொஞ்சியே சித்தும் வடிப்பாள்!  (அப்பனே)

உனக்குள் பரவசம் தந்தே — மூளை
  –உச்சியில் நின்றே சிரிப்பாள்! – அவள்
தினமும் சிலரை அனுப்பி- வினைத்
 –தினவைஉன் மூலமே தீர்ப்பாள்!  (அப்பனே)

சக்தியின் பித்தில் இருந்தே – உன்னால்
 –தப்பவே ஒண்ணாது! – சொன்னேன்! — ஆக
பக்தியும் த்யானமும் வேண்டின் — சக்திப்
 –பரப்புக்குள் போகும்முன் யோசி!  (அப்பனே)

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *