மீ.விசுவநாதன்

images

வெற்றிக் களிப்புதான் தீபா வளியாம் – அக
தீப ஒளியில் தெரிவதுவாம் !
நெற்றித் திலகமாய் நின்று நிலைத்து – அது
நிறைந்த அன்பைப் பகிர்வதுவாம் !
பிள்ளைக் குணமெனக் கூடி மகிழ்ந்து- அது
தினமும் அகிலம் சுற்றுவதாம்!
கள்ளம் கபடமே இல்லா உறவாய் – இக்
கலியை அழிக்கத் தோன்றுவதாம்!

புதுமை பலவெனத் தேடித் பிடித்து – இப்
பூமி செழிக்க விதைத்திடுமாம்!
முதுமை இலாதொரு ஞான மளித்து -நம்
மோகத் திரையைக் கிழித்திடுமாம் !
பறவை யெனமனம் பாய்ந்து திரியும் – அப்
பழக்கம் திருத்தி நெறிதருமாம் !
சிறகை ஒடுக்கியே சிந்தனை செய்ய -ஒளி
சிறந்த வழியைத் திறந்திடுமாம்!

(இன்று 28.10.2016 வெள்ளிக்கிழமை இரவு
தீபாவளிப் பண்டிகை, நாளை சனிக்கிழமை
அதி காலை நரகசதுர்த்தி)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *