-உமாஸ்ரீ

book‘ராகிலா’ பெயர் விசித்திரமாக இருக்கிறதில்லையா? ராகிலா என்ற பெயரை எப்படி வைத்தார்கள் என்று அவரே கீழே கூறுகிறார்.  ராகிலா  ஒரு  கவிதாயினி; மற்றும் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவர் எழுதிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைப் படித்தேன். (”விடியலை நோக்கி…,”  “தெய்வத் தாய்”   இரண்டும்  மிக அற்புதமாக உள்ளன. அவருடன் ஒரு நேர்காணல்.

1. தங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்…

rakilaஎன் பெயர் ராகிலா. அப்பா பெயர் ராக்கன் அம்மா பெயர் கமலா . அப்பா அம்மா பெயரில் உள்ள ராக்கன் , கமலா இணைந்து ராகிலா என்றானது.

இராஜபாளயம் தாலுக்காவிலுள்ள சொக்கலிங்கபுரம் என்னும் கிராமத்தில் வசிக்கிறேன்.

எம்.ஏ., பி.எட், எம்.எட். படித்திருக்கும் நான் 17 வருடங்கள் ஆங்கிலப் பள்ளி ஆசிரியை. கடந்த ஏழு வருடங்களாக ஆங்கிலப் பள்ளியின் முதல்வராகப் பணியாற்றி உள்ளேன். சமீபத்தில் என் தாயார் தவறி விட்டதால் பள்ளி முதல்வர் வேலையை விட்டுவிட்டேன்.

10 வருடங்கள் காலையில் பள்ளிக்கூடம், மாலையில் இராஜபாளையத்தில் உள்ள தானியார்த் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பளராக பணியாற்றியுள்ளேன். பட்டிமன்றம், கவியரங்கத்தில் பங்குகொள்கிறேன். தாமரைக்குளம் கவியரங்கத்தில் ‘கவிதாயினி’ என்ற பட்டமும் பெற்றுள்ளேன்.

2. ’கவிதாயினி’ ராகிலா தாங்கள் எழுதிய கவிதைகளில் ஒன்றைப் பாடுங்கள்.

நான் எழுதிய ஒரு கவிதை:

உன்னில் நான் !

உன்னில் நான் –
என்னில் நீ!
ஓருடல் ருயிர்
ஆனோம் அன்று!
ஓருடல் ஈருயிர்
ஆனோம் இன்று!
ஆம் உன் இதயம்
எனக்குப் பொருத்தப்பட்டு!
நீயோ என் நினைவுகளில்…

3. எப்பொழுதிலிருந்து எழுதுகிறீர்கள்?

1995-லிருந்து கிட்டத்தட்ட 21 வருடங்களாக எழுதுகிறேன். என்னுடைய துணுக்குகளும், படைப்புகளும் 1995இலிருந்து வந்து கொண்டிருக்கின்றன.

நான் எழுதிய நூல்களின் எண்ணிக்கை:

சிறுகதைத் தொகுப்புகள்  – 2
நாவல்கள் – 7

கிட்டத்தட்ட 100 சிறுகதைகள் எழுதியுள்ளேன். (40 சிறுகதைகள் புத்தகமாகவும்) மீதிச் சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

4. படைப்புகளாக மாறிய சில அனுபவங்கள்…

பெரிய விசயங்களை, எளிய நடையில் எல்லாருக்கும் புரியும் வண்ணம் எழுதுவதுதான் சிறுகதை.

சிறுகதையில் மக்களை சிந்திக்கத் தூண்டும் வகையில் அதன் கரு இருக்க வேண்டும்.

’விடியலை நோக்கி’ என்ற எனது சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் நான் எழுதியுள்ள “குட்டச்சி கிழவி“ என்ற சிறுகதை எனது பாட்டியைப் பற்றிய கதை. சிறுவயதிலிருந்து பாட்டியின் சேவைஉள்ளத்தை பார்த்துப்பார்த்து வளர்ந்த நான், அதை ஒரு சிறுகதையாக எழுதி இருக்கிறேன்.

’தெய்வத் தாய்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் “அது உண்மையா?” என்று எழுதியுள்ள கதை – என் தாய்மாமாவுக்கு ஏற்பட்ட அனுபவமே.

”கருவேலங்காடு“ என்ற எனது நாவல் எனது அம்மாவின் அப்பா அதாவது என் தாத்தாவுடன் பிறந்த ஐந்து அண்ணன், தம்பி மற்றும் ஒரு தங்கை அவர்களின் அனுபவமே!

5. எதற்காக எழுதுகிறேன்?

* எழுதுவதால் எனக்குச் சுற்றுப்புறத்தை ஆழ்ந்துநோக்கும் ஆர்வம் பிறந்துள்ளது.

** மனஅமைதி கிடைக்கிறது.

*** அறிவு விசாலமடைகிறது.

6. எப்பொழுது எழுதுவீர்கள்?

எப்போது நேரம் கிடைத்தாலும் எழுத உட்கார்ந்து விடுவேன். பள்ளிசெல்லும் நேரங்களிலும், இரவிலும், விடுமுறை நாட்களிலும் எழுதுவேன்.

7. தாங்கள் எழுதியவைகளில் தங்களுக்கு மிகவும் பிடித்த படைப்பு எது?

என் குழந்தைகளில் எந்தக் குழந்தை எனக்குப் பிடிக்கும் என்பதுபோல் உள்ளது இந்தக் கேள்வி. என் படைப்பில் எல்லாமே எனக்குப் பிடிக்கும். அதில் மிகப்பிடித்தது என்று பார்த்தோமானால், ”தெய்வத்தாய் ” என்ற சிறுகதையும், ” கருவேலங்காடு ” என்ற நாவலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

8. தாங்கள் படித்த புத்தகங்களில் மிகவும் பிடித்த புத்தகங்கள் யாவை?

கவிஞர் வைரமுத்துவின் ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ மற்றும் கல்கியின்     ’சிவகாமியின் சபதம்’ ஆகிய இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த நாவல்கள்.

9. எழுத விரும்புகிறவர்களுக்குத் தாங்கள் கூறும் யோசனை ஏதாவது…?

பிறக்கும்போதே யாரும் எழுத்தாளராகப் பிறக்கவில்லை.  முயற்சியும் முறையான பயிற்சியும் இருந்து, நிறைய வாசிக்கும் ஆவலும் இருந்தால் கண்டிப்பாக ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளராக ஆகலாம்.

”சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற பழமொழிக்கேற்ப, பழகப்பழக எழுத்து வசப்படும்.”

10. தாங்கள் கூற விரும்புவது ஏதாவது…

அம்மா என்னும் கவிதையைச் சொல்ல விரும்புகிறேன்.

என்னும் உயிர் எழுத்தாகி…
ம்என்னும்  மெய் எழுத்தாகி…
மாஎன்னும் உயிர்மெயெழுத்தாகி…
 உயிரும், மெய்யும் தந்தவள் அம்மா!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “எதற்காக  எழுதுகிறேன்?

  1. Sister Mrs.RAKILA’s kavithai and stories are very well. She is writing good messages through her stories in simple to understand & to stimulate the readers to think postively. She is very talented and confident person. She seems to be very simple and good leadership in kind way even at home,friends,job at anyware. I wish her, you will receive many awards in future for your success.

  2. மிகவும் அருமை ராகிலா உங்கள் படைப்புகள் உங்களை நாங்கள் எப்படி தொடர்பு கொள்ளுவது உங்கள் முகவரி உங்கள் நம்பர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *