தீபம்
கார்த்திகைத் தீபம் வரபோகிறது. கவிஞர் கவிஞர் எஸ்.ஆர்.ஜி சுந்தரம் எம்.ஏ எட்டு சுடர் விடும் தீபங்களை ஏற்றியிருக்கிறார். படித்து ரசியுங்கள்.
உமாஸ்ரீ
அன்றைய பாரத விடுதலைக்கே
அனைத்தியு மிழந்த அமரர்க்கு
அஞ்சலியா யேற்றுவோம் ஒருதீபம் !
பாரத எல்லைப் பாதகரைப்
பதராய் விரட்டும் படைகட்குப்
பணிவா யேற்றுவோம் ஒருதீபம் !
பாரதம் போற்றிய பண்பாட்டில்
பாதை யமைத்து வாழ்வோர்க்குப்
பக்தியா யேற்றுவோம் ஒருதீபம் !
இலஞ்ச பொன்னும் இழுக்கினுக்கே
இலக்கா காநல் தூயோர்க்கு
இனிதா யேற்றுவோம் ஒருதீபம் !
முதியோர் பணியில் முகஞ்சுளியா
முதிர்ந்த ஞான முற்றோர்க்கு
முத்தா யேற்றுவோம் ஒருதீபம் !
ஊன முற்ற உயிர்களெலாம்
உயர்ந்து வாழ உழைப்போர்க்கு
உவந்தே யேற்றுவோம் ஒருதீபம் !
மானுட வாழ்வு மாண்புறவே
முத்தமிழ் இலக்கியம் முனைவோர்க்கு
மறவா தேற்றுவோம் ஒருதீபம் !
தேச நலமே தம்பணியெனும்
தேசப் பற்றுடைத் தூயோர்க்கு
தினமு யேற்றுவோம் ஒருதீபம் !