கார்த்திகைத் தீபம் வரபோகிறது. கவிஞர் கவிஞர் எஸ்.ஆர்.ஜி சுந்தரம் எம்.ஏ எட்டு சுடர் விடும் தீபங்களை ஏற்றியிருக்கிறார். படித்து ரசியுங்கள்.

உமாஸ்ரீ

 

அன்றைய பாரத விடுதலைக்கே

அனைத்தியு மிழந்த அமரர்க்கு

அஞ்சலியா யேற்றுவோம் ஒருதீபம் !

 

பாரத எல்லைப் பாதகரைப்

பதராய் விரட்டும் படைகட்குப்

பணிவா யேற்றுவோம் ஒருதீபம் !

 

பாரதம் போற்றிய பண்பாட்டில்

பாதை யமைத்து வாழ்வோர்க்குப்

பக்தியா யேற்றுவோம் ஒருதீபம் !

 

இலஞ்ச பொன்னும் இழுக்கினுக்கே

இலக்கா காநல் தூயோர்க்கு

இனிதா யேற்றுவோம் ஒருதீபம் !

 

முதியோர் பணியில் முகஞ்சுளியா

முதிர்ந்த ஞான முற்றோர்க்கு

முத்தா யேற்றுவோம் ஒருதீபம் !

 

ஊன முற்ற உயிர்களெலாம்

உயர்ந்து வாழ உழைப்போர்க்கு

உவந்தே யேற்றுவோம் ஒருதீபம் !

 

மானுட வாழ்வு மாண்புறவே

முத்தமிழ் இலக்கியம் முனைவோர்க்கு

மறவா தேற்றுவோம் ஒருதீபம் !

 

தேச நலமே தம்பணியெனும்

தேசப் பற்றுடைத் தூயோர்க்கு

தினமு யேற்றுவோம் ஒருதீபம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *