ரா.பார்த்தசாரதி              

 

புயல் என்றாலே மக்கள் மனதில் கலக்கம்

விபரீத விளைவுகள் ஏற்படும் என்கிற தயக்கம்

புயலால் சேதம் ஏற்படுமே  என்ற தவிப்பு

மக்கள் மனதில் தவிர்க்கமுடியாத பதைபதைப்பு !

 

நடா புயலே ! எங்களை சேதப்படுத்தாமல் ஒதுங்கிடு

மக்கள்  பணமில்லாமல் பொருள் வாங்க தவித்திடுது

மக்களிடத்தில்,பணம் எல்லாம் செல்லா காசாக  மாறியது

இதனை கண்டு அரசும் என்ன செய்வதென்று தவிக்கின்றது !

 

புயலே ! என்று அரசும் உதவும் நிலையில் இல்லை

மக்கள் கையில் பணமும் அதிகம் இல்லை.

எங்கள் நிலையறிந்து சற்றே  ஒதுங்குவாயா

எங்கள் வாழ்வினை நிலைபெறச்  செய்வாயா !

 

புயலுக்கு பின்னே அமைதி என்றான்  மனிதன்

அரசு  முன்னெச்சரிக்கை செய்வதையும் கண்டான்

சீர்செய்ய  அரசின் மெத்தன போக்கையும் கண்டான்

இயற்கையால் ஏற்படும் அழிவை தடுக்க வழி கண்டானா !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *