ரா.பார்த்தசாரதி

 

அழுத  கண்ணீர்  என்றும் ஆற்றாமையை உணர்த்தும்

தொண்டுள்ளம், கொண்டு, மக்களின் பசியாற்றினார்

அவர் இறக்கும் போது கடல்நீரும் கண்ணீரில் கரையும்

அலை கடலென மக்கள் வெள்ளம் அஞ்சலி செய்ததே !

 

சாதனை படைத்தது வாழ்ந்து, வரலாறாக புகழ் ஓங்கியதே

மக்கள் மனதில் குடிகொண்ட தால் அம்மா என அழைத்தனரே

வினைத்திட்பம் கொண்டு எதிரிகளையும் எதிர்த்து நின்றாய்

அஞ்சி விடாமல் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றாய் !        

 

செய்வதை மட்டும்  சொல்லிட வேண்டும்

சொன்னதை  நிச்சயம் செய்திட வேண்டும்

நல்லதையே செய்ய நினைத்திடல் வேண்டும்

பாகுபாடின்றி செயலாற்றினால் புகழ் தேடி வரும் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *