மலர் சபா

மதுரைக் காண்டம்அழற்படு காதை

இல்லறம் வழுவாத மகளிர்

தம் இல்லத்துக்கு வருகின்ற
விருந்தினர்களைப் பேணி,
ஒவ்வொரு நாளும் இல்லத்து அறங்கள்
தவறாமல் செய்து வருகின்ற,
பெரிய மனைகளில் வாழும் மகளிர் fire
மிகுந்த மகிழ்ச்சி அடைந்து,
“அழகான அணிகள் அணிந்த மார்பினை உடைய,
கணவனை இழந்த,
அந்த இழப்புக்குக் காரணமாய் விளங்கிய
பாண்டிய மன்னனை வென்ற,
சிறப்பான அணிகளை அணிந்த கண்ணகி,
தன் கொங்கையால் செய்த
இந்தப்பூசல் முறையானது” எனக்கூறி
அவர்களும் கோபப்பட்டு,
பற்றி எரியும் தீக்கடவுளையும்
கைதொழுது வணங்கி நின்றனர்.

நாடக மடந்தையர்

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
கற்றுத் தேர்வுபெற்ற இசையின் இயல்பறிந்து,
அதற்கேற்ப நடனம் ஆடும் மகளிர்
வாழ்கின்ற வீதிகளிலும் தீ பரவியது.
மத்தளம், முழவு, இசையைத்
தாழ்ந்து ஒலிக்கச் செய்யும்
இனிமையான புல்லாங்குழலும்,
பண் மற்றும் அதன் வகைகளை
இசைக்கச் செய்யும் யாழ்ப்பாடல்
இவற்றின் துணைகொண்டு நடிக்கின்ற நாடக மகளிர்,
தாம் ஆடுகின்ற அரங்குகளில் தீ பரவியது கண்டு,
அரங்குகளை விட்டு வெளியேறி,
கண்ணகியைக் கண்டு,
“இம்மூதூர் மதுரைக்கு வந்து
தன் கணவனை இழந்து,
ஆராயாமல் தன் செங்கோல் வழுவிய
பாண்டிய மன்னனைத்தன் சிலம்பின் மூலம் வென்று
இந்த ஊரை நெருப்புக்கிரையாக்கிய
இவள் எந்நாட்டினளோ?
யாருடைய மகளோ?”
என அஞ்சி இரக்கப்பட்டனர்.

***

படத்துக்கு நன்றி: கூகுள்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *