என்னவோ சாபமோ ஏனோ பிறப்பிங்கு
நன்மக வாயென நாப்புலம்பும்… தன்மையில்
பெண்ணென ஆணாகப் பேடு!

பேடும் ஒருபிறவி பெற்றாரென் றெள்ளிநகை
யாடும் நிலையறுக்கு மார்வமானப்.. பாடுதரும்
ஊடு பயிராய் உறவு!

உறவுடன் கூடும் உலகினில் பேடும்
பிறப்பென உண்மை பிணைந்த… அறமும்
மறவனுக் கேற்புடைய மாண்பு!

… நாகினி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *