கோபிசெட்டிப்பாளையம் பி.கே.ஆர்.மகளிர் கலைக் கல்லூரியில் இணையத்தமிழ் குறித்த சிறப்புரை

0

மு.இளங்கோவன்

ஈரோடு  மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள  பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் 03.01.2017 (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு இணையத் தமிழ் குறித்த சிறப்புரையும், செய்முறைப் பயிற்சியும் நடைபெற உள்ளன. புதுச்சேரி மு.இளங்கோவன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இணையத் தமிழ் குறித்த சிறப்புரையாற்றுகின்றார். அருகில் உள்ள கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் கலந்துகொள்ள இயலும்.

கோபிசெட்டிப்பாளையத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடலும் கலந்துரையாடலும்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் 03.01.2017 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குப் புலவர் மா. அரசு நினைவு கல்வி அறக்கட்டளையின் சார்பில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் திரையிடலும் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை. ப. சுந்தரேசனாரை ஆதரித்த பெருமக்கள் கொங்கு மண்டலப் பகுதியில் மிகுதியாகும். புன்செய்ப் புளியம்பட்டியைச் சேர்ந்த தமிழன்பர்கள் குடந்தை ப. சுந்தரேசனாரை அழைத்து அவர்தம் தமிழ்ப்பணிக்கு உதவியுள்ளனர். பஞ்சமரபு நூல் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்த வேலம்பாளையம் வித்துவான் வே.இரா. தெய்வசிகாமணிக் கவுண்டரிடம் ஓலையிலிருந்து பெற்றே பதிப்பிக்கப்பட்டது. இத்தகு பெருமைக்குரிய கொங்கு மண்ணில் ப.சு. ஆவணப்படம் திரையிடப்பட உள்ளமை ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

கோபி, ஈரோடு, சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தமிழன்பர்கள்  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

தொடர்புக்கு: திரு. அரசு தாமசு ஆசிரியர் அவர்கள் 9842097878

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *