கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
நீல பத்பநாபன் அவர்களின் விஷ்ணு-புரம் நாவலை
இரா.முருகன் படிக்கத் தந்தபோது….
—————————————————————————————————–
கேசம் திருவல்லா கால்கள் திருவாப்பூர்
சேஷ சயனத்தில் ஸ்ரீநிதி -வாசனாய்
நீளப் படுத்தவரே நீலபத்ம நாபரே
கோலத் திருவுருவே காப்பு….
THREE TIER PROTECTION FOR திருவனந்த புர ஸ்வாமிக்கு….
————————————————————————————-
பாஞ்சாலி, ஆனை, பிரகலாதன் துன்பத்தில்
பூஞ்சோலை இன்பமாய் பூத்தவா -ஏஞ்சாமி !
காப்புக் கடவுள்நீ கேரளத்தில் முப்பாது
காப்பில் கிடக்கலாமோ கூறு….
சர்வம் விஷ்ணு “மாயம்” ஜகத்….
“சர்வமும் வாசுதேவ சாயலாய் பார்ப்போர்க்கு
கர்மப்ரா ரப்தம் கிடையாது ;-மர்மமிதை
போதித்த யாதவன் பாதத்தைப் பற்றுக;
வேதத்தின் சாரம் விஷ்ணு”…
வாசுதேவ மயம் ஜகத்….
——————————————-
“ஏசுதேவன், அல்லா, எருதேறி வெண்ணீறு
பூசுதேவன், நான்முகன், பொற்பில்வேல் -வீசுதேவன்
வீசுகாதன் வேழன், வியனோ வியன்கேசவ்,
வாசுதேவன் என்றே வணங்கு”….கிரேசி மோகன்….
பொற்பில்வேல்-மலையில் வேல் முருகன்….
வியனோ வியன்கேசவ் -வியத்தகு ஓவியன் கேசவ்….
கேசம் திருவல்லா கால்கள் திருவாப்பூர்
சேஷ சயனத்தில் ஸ்ரீநிதி -வாசா
பதினெட்டு மைலாய் படுத்தோய் எனக்கு
விதியெட்டா வாழ்வை வழங்கு….
தங்கத்தில் திருவனந்தன் கோலத்தை கணினியில் கண்டு….
————————————————————————-
அங்கம் ஜொலிக்க அயனரன் பாதுகாப்பில்
தங்கமாய்த் தூங்கும் திருவனந்த -சிங்கமே !-
பாற்கடல் விட்டெதற்கு பாதாளப் பள்ளிகொண்டீர்
வேர்க்கலையோ அங்குமக்கு விஷ்ணு….
அடையார் அனந்த பத்பனாப ஸ்வாமி கோயிலில் எழுதியது
—————————————————————————
கடலேழில் தூங்கி களைப்புற்றாய் போலும்
அடையாற்றில் பள்ளி அடைந்தோய் -மடல்வாழை
தென்னை மரம்சூழ் திருவனந்தா, ஐம்புலக்
கண்ணைப் பறித்தெனைக் காண்….கிரேசி மோகன்….!