பவள சங்கரி

1484803238vadivasal 2

திறக்கும் வாடிவாசல் நின்
திறம் வியக்கும்காலம் தமிழா
மறம் எங்கள் அறமென
கரம் இணையும் வரமென
சுடர்மிகு தீபம் ஏந்தினாய்
கடல் அன்னையும் வரமருளும்
நலம் அனைத்தும் வென்றாய்
இணையமும் ஆண்டிராய்டும்
இழிவெனும் நிலை தகர்த்தாய்
சகலமும் சமதர்மம் எனும்
சத்தியம் காத்து சாதித்தாய்
விவேகமும் வீரசாகசமும்
வித்தென விருட்சமாய் விரிந்தாய்
சகோதரத்துவமும் மனிதமும்
சமயோசிதமும் கருத்தென துணிந்து
நடைபோட்டு மனம் குளிர
தாயவளின் வாழ்த்தும் பெற்றாய்

இளைஞர் சக்தி வென்றதென
இனிவரும் காலங்கள் உம்
புகழ்பாடி வரலாறும் பேசும்
வரங்கள் இயைந்து அளிக்கும்
கரிசனங்கள் மலையாய் குவியும்
தரிசனங்கள் முறையாய் மலரும்
நந்தியெம்மானின் கொம்பிரண்டும்
காக்கும் வரம் பெற்றவரானீர்
அவர்தம் செவிகளிலும் வீர
முழக்கமிட்டு சிலிர்த்தெழச் செய்தீர்
கோடி வணக்கங்கள் குறைவிலாது
கூடிப் பெற்றீர்! அமைதிச்
சூளுரைத்து சூழுலகும் நேசித்தீர்
விருதும் பட்டமும் பாராட்டும்
எதுவும் தேவையில்லை தமிழன்
எனும் தாரக மந்திரமே
தரணியெங்கும் எதிரொலித்து
ஈன்ற வயிறு இறுமாந்திருக்க
களம்கண்டு நம் கலாச்சாரம்
மீட்டெடுத்த காளை நீவிர்
கல்பகோடி காலம் நின்புகழ்
கடல் தாண்டியும் வாழும் காணீர்!
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
திமில் தழுவும் தமிழன்தன்
வீரமுழக்கம் எட்டுத்திக்கும் விசையென
வீறுகொண்டு எழும் கணந்தொறும்!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *