கொல்லிமலையின் கொள்ளையழகு!
கவியோகி வேதம்
சேலம் நாமக் கல் பக்கச் சிறப்பழகே கொல்லிமலை!
ஓலச்சிறு அருவியுடன் இயற்கைஅன்னை உல்லாசம்!
கொல்லிப் பாவைஎனும் குறு ‘தேவி’(கால்) பாவும் இடம்!
கொல்லும் அரக்கர்களை (அன்று)- குறுநகையால் வென்றஇடம்!
யாரையும் இதுவரையும் கொல்லாத மலையைப்போய்
பார்! இது ஆட்கொல்லி மலைதாண்டா! என்றுசொன்னால்
கவி இவனும் காதில்பூ வைத்தவனோ? நம்புவனோ?..(இது)
கவலையைக் கொல்லும்மலை! மனஅழுக்கைக் கொல்லுமலை!!
குறிஞ்சிநில வளச் ‘சாட்சி’ கொல்லிமலை! இயற்கை(யின்)மடி!
உறிஞ்சியபின் ‘சக்தியன்னை ’உயர்ந்தசிவன் வயிற்(று)அணுவை,,
கீழிறங்கிக் காட்டுகின்றாள் கிறுகிறுக்கும் தன் அழகை!
பாழிலிருந்(து) ஆன்மாவைப் பதமாக மேலுயர்த்த
தனக்கென்று தனிவழியை தளிர்த்தடங்கள் பூஞ்சோலை
முனகிநிற்கும் பலமுகில்கள், மூலிகைப் பண்ணைகள்
பெரியசாமி கோயில்கள், பெரியசந் தனப்பாறை
அருமைப் ‘ படகுவீடு’, அட்டகாச மலைத்தொடர்கள்,
தாவர இயல்பூங்கா, தொலைநோக்கி நிலையங்கள்,
மேவுசுத்தத் தென்றல், மிதமான தட்பவெப்பம்
மூலம் எல்லாம் நமைக்கவர்ந்து முன்னேற்று கிறாள்மனத்தை!
‘வாலைமகள்’ சக்தி- எண்ணில், வளையாத நெஞ்சுமுண்டோ?
.
இருண்டஉங்கள் மனஇறுக்கம் ரெண்டுநாளில் போகுமய்யா!
பருக்கவைத்தே உம்’ பர்ஸை’ , பின் இங்கே செலவழிப்பீர்!
கட்டிவைத்த கண் இரண்டால், கருங்குயிலைக் காண்பீரோ?
பெட்டிகளில் பணம்பூட்டிப் பேரின்பம் அடைவீரோ?
.
ஓய்வினையே கழிப்பதற்கும் இன்பமெலாம் சுகிப்பதற்கும்
தாய்மடியாய் கொல்லிமலை தான் -உம்மை வரவேற்கும்!
எங்கும்உமக்கு வேகம்ஏன்? எதிலுமே சலிப்பும்ஏன்?
தங்கத் தமிழ்மன்னர் பாரி, காரி, மலையன்,ஓரி
.
ஆண்டுவந்த கொல்லிமலை ஆத்மாவின் ஏகாந்தம்!
ஆண்டிடுமோ சிறுநோயும் அதிகநாள் நீர்தங்கின்?
கோடி கொடுப் பினு(ம்)இதுபோல் கற்கண்டுநீர் கிட்டிடுமோ?
வாடவே வைக்காத வளர்பசுமை வேறெங்கு?
.
பலாமலர்த் தேனும் மிகுருசி அன்னாசி,மலர்த்தேனும்
நிலாபோல் கீழ்கொட்டும் நின்றறியாத் தேனீக்கள்!
சாணக்யன் பிறந்த இடம்சடசடென ஆகாயகங்கை(ஓர்)
பாணம்போல் கீழ்பாய்ந்து பசுந்தளிர்கள் செழிக்குமிடம்!
கவிதை ஊற்றே கொல்லிமலை!- கோபக்
கனலை மாற்றும் நல்லமலை!
தவமாய்ச் சித்தர் அருளுமலை!நீவிர்
சற்றே படகில் வந்துகாண்பீர்!
‘கவை’போல் காது கள்விடைக்கத்துளிர்கள்
கடித்த முயல்கள் ஓடும்மலை!
நவையே கொள்வீர்! இம்மலையை அழகை
நன்றாய் உண்ண வந்திடுவீர்