கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”சென்ற வருடம் என்று நினைக்கிறேன்….திருவல்லிக்கேணி ஸ்ரீபிரியா நினைவூட்டியும், பாழும் தூக்கத்தால் பெருமாள் கருட வாகனம் பாராது பாழானேன்…இன்று ”கேசவ்” உபயத்தால் வினதை மகன் முதுகேறி வரும் புள்ளமர்ந்த(கருட வாகனன்) புருஷோத்தமனை தரிசிக்கும் வாய்ப்பு….!
பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனம்….
——————————————————–
கொள்ளும்புண் ணாக்கும் குதிரைக்(கு) அளித்தன்று
வில்விஜயன் தேரை விரட்டியவன் -புள்ளமர்ந்து
வல்லிக் குளத்தை வலம்வருதல் காணாது
பள்ளிக் கிடந்தொழிந்தேன் பாழ்….கிரேசி மோகன்….!