மீனவர்களின் வாழ்வில் ஒரு விடிவெள்ளி!
பவள சங்கரி
மீனவர்களின் வாழ்வில் ஒரு விடிவெள்ளி!நமது இஸ்ரோவின் புதிய கண்டுபிடிப்பு! இந்தியா சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 4 செயற்கைக்கோள்கள் மூலமாக இந்தியாவிற்கான ஜி.பி.எஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழிசெலுத்தல் முறை மூலமாக கடலில் மீன் பிடிக்கும் நமது மீனவர்கள் சர்வதேச எல்லையை எளிதாகக் கண்டுணரும் வகையில் புதிய செயலியை உருவாக்கியுள்ளனர். இதைத் தங்கள் கைபேசியில் பதிவேற்றிக்கொண்டால் மீனவர்கள் அந்நிய எல்லைக்குள் சென்று ஆபத்தில் சிக்கி உயிரிழப்பதைத் தவிர்க்கலாம். இந்த சாட்டிலைட் மூலமாக எந்தெந்தப் பகுதிகளில் மீன்கள் அதிகமாக உள்ளன என்பதையும் கண்டறியலாம். தங்கச்சி மடம் மீனவ இளைஞரின் ஆன்மா சாந்தியடையும் வகையில் இந்த செயலியை பிரபலமாக்க வேண்டியது இஸ்ரோ மற்றும் அரசின் கடமை.