அன்றும், இன்றும்
ரா.பார்த்தசாரதி
பெற்றோர்களே பிள்ளைகளின் திருமணம் தீர்மானிக்கப்பட்டதே
மகன் , மகளின் வாழ்க்கையும் சிறப்பாக அமைந்ததே
நிலைமையறிந்து, குலமறிந்து, திருமணம் நிச்சயக்கப்பட்டதே
இன்றோ ஆணும், பெண்ணும்,பேசி திருமணம் முடிவடைந்ததே !
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிரா,
பழமை மாறாமல் காத்தவர்களின் தவறா,
அக்கால திருமணம் பந்தத்தினால் ஏற்பட்டதே
இக்கால திருமணம் பணத்தினால் தீர்மானிக்கப்பட்டதே !
அன்பு, பாசம், தியாகம் இவற்றிற்கு அர்த்தம்முண்டு
இன்று இவற்றிற்கு எல்லாம் ஓர் அளவுண்டு
சேர்ந்து வாழ்ந்தால் கோடி நன்மை என சொல்வதுண்டு
இன்றோ பிரிந்து வாழ நினைப்பதுண்டு !
வாழ்வின் காலச்சக்கரம் அன்று உறுதியாயிருந்ததே
வாழ்க்கை வாழ்வதற்கே என சொல்லப்பட்டதே
வாழ்க்கை அன்று சொர்க்கமாய் அமைந்ததே
இன்றோ வாழ்க்கை நரகமாய் மாறியதே !
பழமைப்பேசி இளந்தலைமுறையினரை திருத்தமுடியுமா
புத்திமதி கூறினாலும், அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியுமா
நானே ராஜா என்று நினைப்பவர்களை திருத்தமுடியுமா
அழிவு பாதையில் செல்பவர்களை தடுக்கமுடியுமா !
உலகத்தோடு ஒட்டி வாழ்வதே வாழ்வு
காலத்திற்கு ஏற்ப வாழ்வதே இதற்கு தீர்வு
விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் என்றும் நன்மை
இதனை மறந்து வாழ்ந்தால் வாழ்வே தனிமை !