ஸ்ரீராமன்
மீ.விசுவநாதன்
அவரைப்போல் ஒவ்வொரு நாழியும் – நான்
ஆக நினைக்கிறன் அன்போடு
சுவரைப்போல் ஆணவம் நின்றெனை – தினம்
சுற்றி அடிக்குது வம்போடு !
நினைவெல்லாம் உத்தமப் பாதையை – நான்
நேரே கடந்திட விழைகின்றேன்
பனையளவாய்ப் பந்தமும் பாசமும் – உடன்
பற்றி இழுத்திடத் தவிக்கின்றேன் !
அரண்மனையின் வாழ்விலும் தாழ்விலும் -அவன்
அமைதி அடைந்ததை அறிகின்றேன்
முரண்பலவாய்க் கொண்டுள என்னுளே – ராம
மூல ஒலியினை உணர்கின்றேன் !
தர்மமான வாழ்வினைப் போற்றிட – இறை
தானே ராமனைக் காட்டியது
நிர்மலமாய் உள்ளமும் நின்றிட – ராம
நீதி காப்பதே முக்தியது !
(இன்று 04.04.2017 ஸ்ரீ ராமநவமி)