மீ.விசுவநாதன்

 

sri-rama-pattabhishekam

 

 

 

 

 

 

 

 

 

 

 

அவரைப்போல் ஒவ்வொரு நாழியும் – நான்

ஆக நினைக்கிறன் அன்போடு

சுவரைப்போல் ஆணவம் நின்றெனை – தினம்

சுற்றி அடிக்குது வம்போடு !

 

நினைவெல்லாம் உத்தமப் பாதையை – நான்

நேரே கடந்திட விழைகின்றேன்

பனையளவாய்ப்  பந்தமும் பாசமும் – உடன்

பற்றி இழுத்திடத் தவிக்கின்றேன் !

 

அரண்மனையின் வாழ்விலும் தாழ்விலும் -அவன்

அமைதி அடைந்ததை அறிகின்றேன்

முரண்பலவாய்க் கொண்டுள என்னுளே – ராம

மூல ஒலியினை உணர்கின்றேன் !

 

தர்மமான  வாழ்வினைப் போற்றிட – இறை

தானே ராமனைக் காட்டியது

நிர்மலமாய் உள்ளமும் நின்றிட – ராம

நீதி காப்பதே முக்தியது !

    (இன்று 04.04.2017 ஸ்ரீ ராமநவமி)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *