நாகினி
(சிந்தியல் வெண்பா)

 

கண்ணெனத் தத்துவங்கள் காலமெல்லாம் நீண்டிருக்கப்
பண்ணென ஏட்டில் படங்களில்.. கண்ணிமை
வண்ணமானார் கண்ணதாசன் வாழ்ந்து!

காவியம் ஆக்கிய கண்ணதாசன் என்றென்றும்
ஓவியம் என்றே ஒயிலாகப் .. பாவிகளின்
நாவிலும் பாட்டாவார் நம்பு!

பாவங்கள் நீக்கியே பண்படுத்தும் தத்துவம்
காவலாக எந்நாளும் கண்ணதாசன்.. பாவலம்
ஏவலாகி வந்திடும் ஏற்பு!

ஆவலுடன் பாடிட ஆனந்த கீதமென
நாவரசு கண்ணதாசன் நற்றமிழ் .. நாவலும்
பாவலரால் ஏற்றிடும் பாட்டு!

… நாகினி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *