ரா.பார்த்தசாரதி

 

 

அ  என்பது  உயிரெழுத்து 

ம்   என்பது  மெய்எழுத்து 

மா  என்பது  உயிர்மெய் எழுத்து 

 

உனக்கு உயிரும், உடலும் தந்தவள் அம்மா 

உனக்கு முகவரி அளித்தவளும்  அம்மா

உலகை எனக்கு நீ  காட்டினாய் 

உனக்கு என்ன நான் தருவேனோ !

 

உனக்கு ஆயிரம் கவலைகள் இருப்பதாக தெரியும்

இதுவெல்லாம்  என் புன் சிரிப்பாலே  மறையும் 

தொப்புள் கொடி  உறவானதே 

தொட்டிலில்  ஆரம்பமானதே 

 

அம்மா என் ஆசை  அம்மா 

நான் கேட்காமலே முத்தம் கொடுப்பாய் அம்மா 

தோளை  தூளியாக்கி உன் இனிய குரலால் தாலாட்டுவாய் 

உன் மடியினை தொட்டிலாக்கி என்னை தூங்க வைப்பாய் !

 

அம்மா  என்றும்  அன்பின்  உருவமானாய் 

எனக்கு நிழல் தரும்  குடையானாய் 

எனது கண்கண்ட  தெய்வமானாய் 

தியாகத்தின்  உருவமானாய் !

 

அம்மா  என்றாலே கருணையின் வடிவம் 

அம்மா இல்லாத  அனாதைகளுக்கு ஆண்டவனே அம்மா !

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *