தலையாட்டி பொம்மைகளா நினைக்கும் நிலைமையா ?

தாய்க்குலத்தின் வாய் பேசா வனிதையா ?

சாவி கொடுத்தால் சலங்கை ஒலி தாலமிடத்

தாவி ஓடும் பாவைகளா!

 

தன் ஆசைகளை, புதைத்து வைத்து வெளியிடமுடியாத ஊமை

பணம் இருந்தும், அதனை செலவு செய்ய முடியாத நிலைமை

திரைப்படங்களில் வரும் தேனிலவு ,

வானிலவுத் தேவதைகளா !

 

தொப்புள் கொடி அறுந்ததும் அப்பனுக்கு அடிமை,

தாலிக்கொடி யேறியதும் கணவனுக்கு அடிமை,

வேலைக்கு போன ஊழியத்தில் மேலதிரிகாரிக்கு அடிமை,

முதுமையடைந்ததும், பிள்ளைகளுக்கு அடிமை !

 

வாழ்க்கையில் உனக்கு இல்லாத பட்டமா !

விதவை, மலடி, உடன்கட்டை ஏறுடி,

வரதட்சணை வர்த்தகி !

 

வரதட்சணை கொடுக்காதவளை கண்டாலே காஸ் அடுப்பு வெடிக்கும்

தட்டிக் கேட்க யார் வந்தாலும் பணத்தினால் மூடி மறைக்கும்!

 

புகுந்த வீட்டில் மாமியாருக்கு அடிமை,

ஆணைப் பெற்றவளும் நீதான்

பெண்ணைப் பெற்றவளும் நீதான்

ஆயினும், வீடும்,நாடும் உனக்கு பொல்லாத சிறைதான் !

 

தலையாட்டம் நின்று, தலை நிமிர்ந்து

என்று வீதியை எதிர்க்கின்றாயோ

அன்றுதான் உனக்கு விடுதலை பெண்ணே !

ரா.பார்த்தசாரதி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *