ராஜகவி ராகில்

 

எழுதுகோல்

நிலம் காகிதம்

எழுதுகிறான்

உழவனெனும் கவிஞன்

 

தேகம் கருமேகம்

வியர்வை மழை

பொழிகிறான்

பயிர்கள்

செழிக்க

 

பச்சை நிற

நெற்பயிரை

மஞ்சளாக்கி மகிழ்கிறது

உழவன் உழைப்பு

 

வயல் என்பது

சேற்று நிலமல்ல

உழவன்

கருந்தோல்

 

அவன் கண்ட

கனவின் நிஜம்

நெல்மணி

 

உழவன் இல்லாத

ஊரில்

நீர் நிலமிருந்தும்

அது

பாலைவனம்

 

ஓர் உழவன்

சமன்

ஆயிரம்

அரசர்களுக்கு

 

உழவனை மதிக்காத

ஊர்

எரியும்

பஞ்சத்தால்

 

வெறும் பானைக்குள்

சோறு

நிரப்புகிறது

உழவன் வியர்வை

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *