பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

18471360_1321590444561818_1009454329_n

24942309@N07_rமுத்துக்குமார் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (03.06.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையுமபெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி (114)

  1. பூமி சுழல்வதும்
    சூரிய சந்திரர் வருவதும் போவதும்
    இருளும் ஒளியும் தோன்றி மறைவதும்
    இயற்கையின் வினையாகும்.

    தன்னுடை குடும்பமாம்
    மனையுடன்குழவியும்
    ஈருருளியில் செல்வதில்
    அகமதும் சுகமதாகும்.

    தோற்றம் மறைவதும்
    மறைந்தது பிறப்பதும்
    இயற்கையின் செயலாகும்
    இங்கோ

    ஈருருளியும் இயற்கையும்
    இயங்கு நிலையில்
    இயங்கா நிலையை
    காட்சி பிழையாகும்.

    அதுவே
    தோற்ற முடிவாகும்.

    தோன்றா நிலையே
    முற்றும் நிலையென
    பற்றுகள் நீங்கிய
    பரமர்கள் பகர்ந்தார்.

    தோன்றும் வரை
    தோற்றத்தில் வாழ்வோம்
    தோற்ற மறைவை
    போற்றி புகழ்வோம்.

    பயணத்தில் நாளும்
    வேகத்தை குறைத்து
    குடும்பத்தை காப்போம்
    நலமுடன் வாழ்வோம்.

    நக்கினம் சிவம்

  2. உந்துவிசைச் சைக்கிள் எங்கு போகுது ?

    சி. ஜெயபாரதன், கனடா

    மந்தை மாட்டு வண்டியில்
    சந்தைக்குப் போன
    முந்தைய சாணி யுகம்
    பிந்திப் போனது !
    ஜல் ஜல்லென்று
    சதி தாள மிட்டோடும்
    குதிரை வண்டிகள் காலமும்
    விதி மாறி மறைந்தன !
    நிதிச் சிக்கன இரு சக்கர
    மிதி வண்டிகள்
    புதிராக வேகமாய் ஓடின !
    மனிதர்
    குதிவலி குறைக்கப்
    புதியதாய்ப்
    பெட்ரோல் எஞ்சின் பூட்டிய
    விந்தை வேக வண்டி
    இப்போது
    உந்துவிசை ஸ்கூட்டி வாகனமாய்
    வந்து விட்டது !
    வேகத்தில் பன்மடங்கு விரைந்தாலும்
    விபத்துகள் நேர்வதும்,
    சோகமும், துக்கமும், உயிர்கள்
    துறப்பதும் அனுதினம்
    தொடர்ந்தன !
    எதற்கும் நாம்
    விலை தர வேண்டும் !
    விஞ்ஞானம்
    இருதலைத் தெய்வம் !
    ஆக்க பூர்வமாய்
    அள்ளிக் கொடுக்கவும் செய்யும் !
    துள்ளிக்
    கொல்லவும் செய்யும் !
    உந்து சைக்கிளில்
    செல்லும் குடும்பத்தைப் பார் !
    எமனை நோக்கிப் போகும்
    அன்னை !
    அருந்தவப் பிள்ளை !
    ஏனில்லை,
    அவரது தலைகளில் மட்டும்
    பேணும் கவசம் ?

    ++++++++++++++++

  3. வேண்டாம் வேகம்…

    குடும்ப மெல்லாம் கூடயேற்றி
    காற்றைப் போல பறப்பவரே,
    குடும்பம் காத்திடும் முறையிதுவா
    கூடுதல் வேகம் முறையாமோ,
    தடுக்கும் கவச மணிந்தாலும்
    தாண்டும் வேகம் இடர்தானே,
    அடுக்கும் உறவுகள் நலங்காக்க
    அதிக வேகம் வேண்டாமே…!

    -செண்பக ஜெகதீசன்…

  4. வேகம் என்றும் சோகம் வேகம் விவேகம் அல்ல தம்பி!
    உன் குடும்பம் வாழ்வது உனை நம்பி!
    உன் தாரம் பின்னால் அமர்ந்திருப்பதை
    மறந்தனையோ தம்பி !
    அழகுப் பிள்ளை உங்கள் நடுவில் அஞ்சி
    அமர்ந்திருப்பதை பார் தம்பி !
    அவள் வாழ்வின் ஆதாரம் நீ என்பதை
    ஒரு கணம் நினைத்தால் தம்பி!
    வேகம் மாறி, நிதானம் வந்திடும் தம்பி!
    தலைக்கவசம் அணிந்திருப்பது !
    நீ மட்டும் தான் தம்பி !
    ஆண்டவனின் அற்புதப் படைப்பு!
    மனித குலம் தம்பி!
    அதை விபத்தால் விபரீதமாய்
    மாற்றி விடாதே தம்பி!
    வாகனத்தை என்றும் நிதானமாய் !
    செலுத்திடுவாய் தம்பி !

  5. நேரத்திற்கு செல்ல இரு சக்ர ஊர்தியில் ஓர் அவசரப் பயணம்

    அவசரமாக இரு சக்ர ஊர்தியில் அதி வேகமான பயணம்

    அதிலும் தன் மனைவி, மகன் இருப்பதை உணராத பயணம் ,

    இறப்பைப் பற்றி கவலை கொள்ளாத ஓர் பயணம் !

    இரு சக்ர ஊர்திகளின் விபத்துக்கள் அன்றாடம் நிகழ்கிறதே

    மனிதனின் உயிர் இன்று மலிவாய்ப் போனதே

    விழிப்புணர்வு ஏற்பட்டும் கவலை கொள்ளாமல் போனதே

    வேகத்திலும், விவேகம் இல்லாமல் போனதே !

    இருசக்ர ஊர்திகளின் முன்னேற்றத்தால் அதி வேகமும்,

    விபத்தினால் மனிதரகளுக்கு ஏற்படும் துர் மரணமும் ,

    கவனமாய் சென்றாலும், எமனாக வந்து இடிப்பான்

    கேட்டால் அதுவே அவன் தலை விதி என்பான் !

    இருசக்ர ஊர்தியில், வேகமாடன் ய் செல்வது விவேகம் அல்ல

    அதிக பாரம், அதிக நபர்களுடன்,செல்வதும் நல்லதல்ல

    சிக்கனல்களை மதிக்காமல் செல்வதும் நல்லதல்ல

    ஓட்டும்போது கைபேசியுடன் பேசுவதும் நல்லதல்ல !

    வண்டியில் செல்லும்போது சாலை விதிகளை மதியுங்கள்

    தலை பாதுகாப்பிற்கு தலைக் கவசம் அணிந்து செல்லுங்கள்

    மனைவி, மகனுடன், கவனமாக வண்டியில் செல்லுங்கள்,

    விபத்தின்றி இருசக்ர ஊர்தியில் பயணம் செய்ய நினையுங்கள் !

    ரா. பார்த்தசாரதி

  6. நேரத்திற்கு செல்ல இரு சக்ர ஊர்தியில் ஓர் அவசரப் பயணம்

    அவசரமாக இரு சக்ர ஊர்தியில் அதி வேகமான பயணம்

    அதிலும் தன் மனைவி, மகன் இருப்பதை உணராத பயணம் ,

    இறப்பைப் பற்றி கவலை கொள்ளாத ஓர் பயணம் !

    இரு சக்ர ஊர்திகளின் விபத்துக்கள் அன்றாடம் நிகழ்கிறதே

    மனிதனின் உயிர் இன்று மலிவாய்ப் போனதே

    விழிப்புணர்வு ஏற்பட்டும் கவலை கொள்ளாமல் போனதே

    வேகத்திலும், விவேகம் இல்லாமல் போனதே !

    இருசக்ர ஊர்திகளின் முன்னேற்றத்தால் அதி வேகமும்,

    விபத்தினால் மனிதரகளுக்கு ஏற்படும் துர் மரணமும் ,

    கவனமாய் சென்றாலும், எமனாக வந்து இடிப்பான்

    கேட்டால் அதுவே அவன் தலை விதி என்பான் !

    இருசக்ர ஊர்தியில், வேகமா ய் செல்வது விவேகம் அல்ல

    அதிக பாரம், அதிக நபர்களுடன்,செல்வதும் நல்லதல்ல

    சிக்கனல்களை மதிக்காமல் செல்வதும் நல்லதல்ல

    ஓட்டும்போது கைபேசியுடன் பேசுவதும் நல்லதல்ல !

    வண்டியில் செல்லும்போது சாலை விதிகளை மதியுங்கள்

    தலை பாதுகாப்பிற்கு தலைக் கவசம் அணிந்து செல்லுங்கள்

    மனைவி, மகனுடன், கவனமாக வண்டியில் செல்லுங்கள்,

    விபத்தின்றி இருசக்ர ஊர்தியில் பயணம் செய்ய நினையுங்கள் !

    ரா. பார்த்தசாரதி

  7. வாகனத்தில் வேகம் வாழ்வில் துன்பம்..!
    =================================

    வானில் எழுமேவு கணைபோல் வரையரையிலா
    —-வாகன மெலாம் சாலையிலே பறக்குதங்கே
    அவசரமாய்ப் போட்ட தார்சாலை வழுக்கியதால்
    —அதிவேகமாய்க் கூட்டுதிங்கே விபத்துக் கணக்கை.!

    வாகன வேகமதைச் சாலையில் காட்டாதேயுன்
    —விவேக புத்தியைச் செய்யும் செயலில் காட்டுவாய்
    ஒடிந்தமூட்டும் உடலிலி லழியாத் தழும்புடனே
    —-நொண்டிவாழும் வாழ்வு தேவைதானா சொல்லு.!

    வீதிகளில் காட்டும் வாகன வேகமதுவுன்
    —-வாழ்வில் இருளைத் தந்து விடுமிதை
    அறியாமல் செல்கின்ற வேகம் ஆபத்தாகும்
    —-அறியவைக்க முயற்சி செய்தும் பலனில்லை

    கணவனை இழந்த காரிகைகள் தன்னருமைக்
    —-குழந்தை இழந்த தாய்மார்கள் பலவென
    உயிரில்லா வாகன மொன்றால் முடியுமொரு
    —-உன்னுயிரை யரை நொடியில் பறித்துவிட.!

    வீதிகளில் விதிகளின் மேல் வழிநடந்தால்
    —விதி முடிந்ததென்று புகலுவதை விடுக்கலாம்
    ஆடி அடங்கிய அருமுடம்பை எரித்து
    —-அரை நொடியில் சாம்பலாவதைத் தவிர்க்கலாம்.!

    சுழலுவதே சக்கரத்தின் செயலானால்..வாழ்க்கைச்
    —-சுழற்சியிலோயாமல் உழலுவதும் மோர் நியதியன்றோ.
    பங்கமிலாப் பெற்றபெரு வாழ்வு நிலைபெறவுன்
    —-அங்கமதில் குறையிலா வாழ்வு வேண்டும்.!

    உனக்கென்று உதித்ததைத் பறிக்க இங்கு
    —-உலகில் யாருக்கும் உரிமையில்ல யென்பதை
    உணர..உன்வாழ்வில் வேகமே வேண்டாமென
    —-நிதானமாய் வாழ்வில் நின்று நட..!

Leave a Reply to Shenbaga jagatheesan

Your email address will not be published. Required fields are marked *