’’ஸ்ரீநிவாசர்’’….!(கண்ணன் வந்தார் எங்கள் கண்ணன் வந்தார்)….!

0

’’அன்புள்ள அனைவர்க்கும்’’…..அடியேன் நாத்திகன் கிரேஸி மோகன் நிச்சயமாய் அல்ல….விடிகாலை பத்து மணிக்கு துயிலெழும் சோம்பேறி ஆத்திகன் ‘’லேஸி மோகன்’’….கோயிலுக்குச் சென்று ஸ்ரீனிவாசரை ‘’காதலிக்க நேரமில்லை’’….இருந்தாலும் செடியாய் வல்வினை தீர்க்க சீனிவாசர், வருடா வருடம் அடியேன் தரிசிக்க வீதியுலா வந்திடும் வாத்ஸல்யர்….(கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன்)….!இது முன்னூட்டம்….இனி பின் ஊட்டச் சத்து-சித்து-ஆனந்தம்….!

சென்ற வருடம் ஸ்ரீனிவாசப் பெருமாள் வீட்டு வாசலில்
விடி காலை எழுந்தருளினார்….அப்போது எழுதிய வெண்பா….
———————————————————————————————————–

சுற்றிடும் ஆழியை, சூழ்கடல்வெண் ஆழியைப்
பற்றி, எதிற்புரம் பத்தினிகள் -நிற்றிருக்க
புள்ளனெழாப் போதினிலே பல்லக்கில் ஊர்வலமாய்
கள்ளனென வந்தவரே காப்பு….!

சேதியொன்று கேளீரோ வீதியுலா செங்கமல
மாதுவுடன் சீனு மயிலையில் -காதினில்
கொட்டொலி கேட்கிறது விட்டொழி தூக்கத்தை
சட்டென வாராய்வா சல்….!

பேயோடு பொய்கையும் பூதமும் பாடிய
மாயோன் மணிவண்ணன் மாம்பழ -வாயோன்
வருகின்றான் வாசலுக்கு வந்தவனை வந்தி
தருகின்றான் நாளும் தவம்….!

வாநீவா சல்பக்கம் வீதியுலா வந்துள்ளார்
தூணிவாச சிங்கன் திருமார்பன் -சீனிவாசர்
பிம்மாலைப் போதில் பெருமாளை சேவிக்க
நம்மாள் அருள்வார் நலம்….!

இந்த வருடம் வந்த போது ஸேவித்து எழுதியது….!
————————————————————————————————

‘’சனிக்கிழமை காலை சரியாக மூன்று
மணிக்கு மயிலையின் மாலர் -மணிக்கண்ணன்
செங்கமலத் தாயார் சமேதராய் வந்திருந்து
சங்கொலி செய்தார் சீனு’’….கிரேசி மோகன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *