கருவறையில் ஏனோ

ஒன்றாய் பிறக்க வில்லை -இருந்தும்

இதுநாள் வரை உன் நிழல் இல்லாமல் தனியாய் இருந்ததில்லை

கடலை மிட்டாய் -எள்ளு மிட்டாய்

நீ கடித்து பார்த்த பிறகே ருசி பார்த்தேனடா

எனக்கு கல் பட்டு அடிப்பட்ட போதும் -வலி

என்னவோ உனக்குதாண்டா !!

நீ சொந்தமும் இல்லை

என் இரத்த உறவும் இல்லை

என் சித்தத்தில் எப்படி கலந்தாயடா ?!

இறைவன் அமைத்து தந்த பந்தமோ நம் நட்பு !!

இயக்குனர் மணிரத்னம்

திரையில் எடுக்காத இன்னொரு தளபதி திரைப்படம்

நம் வாழ்க்கை !!

காதலின் அடையாளமாக தாஜ்மஹால் இருக்கலாம்

நட்பின் அடையாளமாக நாம் தானடா

இந்த மண்ணில் கடைசி வரை இருப்போம்

கடவுளே வந்து உயிர் பறிக்க நினைத்தாலும்

நட்பில் கர்ணனாக நாம் இருப்போமடா !!!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *