கண்ணே! உன் நினைவு

என்னை என்றும் நினைக்க வைக்கிறது!

உன் ஸ்பரிசம் என் தேகத்தை

என்னை என்றும் சிலிர்க்க வைக்கிறது !

உன்னை கண்ட நாள் முதல்

என் கண்கள் காதலால் நனைகின்றது !

உன் இருவிழிகள் கூர்மையான அம்புபோல்

என் இதயத்தை துளைக்கின்றது !

உன் உண்மையான காதல்

என் நெஞ்சை வாட்டுகிறது !

உன்னோடு வாழ்ந்த வாழ்க்கை

என் உள்ளத்தில் கோவில் கொண்டுள்ளது !

உன் மரணமோ உன் கல்லறை பூவாய் கிடந்தது

என் கண்ணீர் துளிகளால் எழுதப் பட்டிருக்கு!

 

ரா.பார்த்தசாரதி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *