அன்பு நண்பர்களுக்கு

காவிரிமைந்தனின் கனிவான வணக்கம்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக முதல் கட்டுரைப் போட்டியாக வல்லமையில் நாங்கள் நடத்திய “என் பார்வையில் கண்ணதாசன்” கட்டுரைகள் 35 வரப்பெற்றதும் அவற்றை பேராசிரியர் வ.வே.சுப்பிரமணியன் அவர்கள் நடுவராக இருந்து தேர்வு தந்தமையும் நினைவிருக்கும் என்று கருதுகிறேன்.

unnamed (2)

அக்கட்டுரைகளை அடுத்து.. அவற்றை இன்னும் வளர்த்து.. இன்னபிற எழுத்தாளர்கள்.. படைப்பாளர்களிடமிருந்து பெற்று நூறு கட்டுரைகள் என்கிற அளவில்.. ஒவ்வொரு கட்டுரைக்கும் காவிரிமைந்தன் எனது பின்னூட்டம் வரையப்பட்டு… இதோ..

“என் பார்வையில் கண்ணதாசன்” என்கிற நூலாக வெளியிடப்பட இருக்கிறது.. கவியரசு கண்ணதாசன் விழாவில்.. 01.07.2017 (அழைப்பிதழ் இணைப்பில்)…வாய்ப்பு உள்ளவர்கள் நிகழ்ச்சிக்கு நேரில் பங்கேற்று பெருமை சேர்க்க வேண்டுகிறேன்!

unnamed (1)

இது தவிர.. நூலைப் பெற விரும்புவோர் தபால் கட்டணம் உட்பட ரூ.750 அனுப்பி வைத்தால்.. உங்கள் இல்லம் தேடி இந்த நூல் அனுப்பப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

அனுப்ப வேண்டிய முகவரி 01.07.2017 நூல் வெளியீட்டிற்குப் பின் தரப்படும்!

unnamed (3)

நூலின் விலை ரூ.950 எனினும் உங்களுக்கான சிறப்பு விலை ரூ.750 (தபால் கட்டணம் உட்பட) என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *