கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘’தூணைப் பிடித்த துரைசிங்கம், வானிலுறிப்
பானை பிடித்தானார் பாக்கியவான்: -கூனை(முதுகை)
மிதித்தேறிக் கண்ணன், மகாபலி ஓணத்(து)(ஓணம் மகாபலியோடு சேர்த்துக் கொண்டாடுவது மலையாள மரபு)
உதித்தவர் ரீவைண்ட்(REWIND) உலா(மலரும் வா மன நினைவு)’’….!
அயிகிரி நந்தினி மெட்டில்…. பெருமாளின் த்வாதச நாமத்தில் ஒன்று ‘’திரிவிக்கிரமர்….
“அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம்
உணர்குரு சுக்கிரர் கட்டளையை
பலியிட அக்கணம் குறள்திரு விக்ரம
வடிவினில் திக்கது தொட்டனனே
புலனுரு வாமனம் பழகிட நீமனம்
பெருகுவை ஆணவ கந்தையிலே
சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
சரணடை கோவண சந்நிதியில்”….
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….கிரேசி மோகன்….!