மழையே தாகம் தீர்த்துவிடு
ரா.பார்த்தசாரதி
மழையே உன்னை நினைத்து ஏங்காதவர்கள் எவருமில்லை
பயிர்கள் உன் வரவுகண்டு மகிழ்ச்சி கொள்ளாமல் இல்லை
விட்ட குறை, தொட்ட குறையாய் வந்து செல்கின்றாய்,
ஏனோ சில மணித்துளி பெய்து வாசல்கோலங்களை அழிக்கின்றாய் !
உன்னை நினைக்காத நாளில்லை தண்ணீர் பஞ்சம் வந்தபோது
நிலத்தடி நீரையும் பல ஆழ்கிணற்றால் சுரண்டப்பட்டபோது
நீரின்றி உலகம் அமையாது என்று மக்கள் நினைத்தபோது
மனிதன் இயற்கையை எதிர்த்து நீரைப் பெற நினைக்கும்போது!
அருவிகளும், மலைகளும் இருகைகொண்டு உன்னை வரவேற்கும்
மலைகளும், உன்னை அருவியாய் பிரித்து மக்களை நனைக்கும்
அருவிகளும் நடனமாடி அழகுடன் மக்கள் மனதில் கலக்கும்
கடலே உன்னை அணைத்து மீண்டும் மேகமாய் உருவெடுக்கும்
உன்னை வரவேற்க நான்மட்டும்மல்லா, என் தாய்நாடும்தான்
நானில்லாத நாட்களில் வந்தாலும், உன் அருமை தெரியவில்லை
நீரை முகந்து , கருமேகமாய் மாறி உலகிற்கு மழையைப் பொழிகிறாய்
கைம்மாறு கருதாது பயிருக்கும்,மக்களுக்கும் தாகம் தீர்க்கின்றாய் !
மழையே, உன் இதழ் துளி எங்கள் உயிர் துளி என கருதுவோம்
என்று தணியும் உன் கோபம், என்று தீரும் எங்கள் தாகம்
மகன் பிறப்பதும்,மழைபொழிவதும், மகேசனும் அறியார்
உன்னருமை கண்டு வான் சிறப்பில் வள்ளுவன் எடுத்துரைத்தார் !