எருதைக்கண்டே வினையாற்றுகிறேன் நான்

கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் – சுப்
தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

 

விட்டு விலகுவதென்பது ஒரேயடியாக விலகுவதல்ல
தங்கியிருத்தலென்பதும் ஒரேயடியாகத் தங்கிவிடுவதல்ல.

மக்களும் மாக்களும் தாவரங்களும் கூட;
ஒவ்வொன்றும் விலகுவதைப்போலவே தங்கியிருக்கின்றன
தங்குவதைப்போலவே விலகியும் இருக்கின்றன.

பூமியில்லா வானமும் இல்லை,
வானமில்லா பூமியும் இல்லை.

ஆதியில் அனைத்தும் ஒன்றாகவே படைக்கப்பட்டன
முடிவற்று ஒன்றாகவே இருக்கின்றன.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *