என்னருமை தாயே பாராளும் நீலாயதாக்ஷியே

0

நாகை ராமஸ்வாமி

unnamed

சிந்தனை செய்திட்டால் சித்தியும் சித்தியாக்கும்                      சிந்தனையில் வந்தமர் செந்தூர வண்ணவளே                           வந்தனை செய்துன் மலர்ப்பதம் பணியுமெனை                             என்ன வேண்டுமென செவியதில் கேட்பின்

என்னென்ன வேண்டுமோ அத்துணையும் தந்தனை                     என்னென்ன தகுமோ அதனையும் அளித்தனை                            சின்னவன் எனை நீ சீர்தூக்கி விட்டனை                               வண்ணமிகு வாசமலர் திருமேனி வருடிட                               புன்னகை பூக்குமுன் கருணை முகம் கனிந்திட                           பண்ணுடன் நின் துதி பாடவும் பணித்தனை

வேறென்ன வேண்டும் திருவே நின் துணையன்றி                      வேறென்ன வேண்டும் நினைப் பணிவதன்றி                            வேறென்ன வேண்டும் நின் நாம ஸ்மரணமன்றி                       வேறென்ன வேண்டும் நின் தாள் நிழலன்றி                        என்றுரைப்பேன்  என்றே உரைப்பேன்                                 என்னருமை தாயே பாராளும் நீலாயதாக்ஷியே

 

37/2017                                           

நாகை வை. ராமஸ்வாமி

http://mio.to/album/Kalakkad+R.+Srinivasan%2C+Kalakkad+R.+Thyagarajan%2C+Lata+Ramchand%2C+Praveena+Avanthikrishan/Nagai+Sri+Neelayadakshi+Ambal+Devotional+Songs+-+Vol+1

Website links to listen to Ambal songs 

Raaga.Com  http://play.raaga.com/tamil/album/Nagai-Sri-Neelayadakshi-Ambal-Devotional-Songs-Vol-1-songs-TD02593

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *