என்னருமை தாயே பாராளும் நீலாயதாக்ஷியே
நாகை ராமஸ்வாமி
சிந்தனை செய்திட்டால் சித்தியும் சித்தியாக்கும் சிந்தனையில் வந்தமர் செந்தூர வண்ணவளே வந்தனை செய்துன் மலர்ப்பதம் பணியுமெனை என்ன வேண்டுமென செவியதில் கேட்பின்
என்னென்ன வேண்டுமோ அத்துணையும் தந்தனை என்னென்ன தகுமோ அதனையும் அளித்தனை சின்னவன் எனை நீ சீர்தூக்கி விட்டனை வண்ணமிகு வாசமலர் திருமேனி வருடிட புன்னகை பூக்குமுன் கருணை முகம் கனிந்திட பண்ணுடன் நின் துதி பாடவும் பணித்தனை
வேறென்ன வேண்டும் திருவே நின் துணையன்றி வேறென்ன வேண்டும் நினைப் பணிவதன்றி வேறென்ன வேண்டும் நின் நாம ஸ்மரணமன்றி வேறென்ன வேண்டும் நின் தாள் நிழலன்றி என்றுரைப்பேன் என்றே உரைப்பேன் என்னருமை தாயே பாராளும் நீலாயதாக்ஷியே
37/2017
நாகை வை. ராமஸ்வாமி
Website links to listen to Ambal songs