ராஜகவி ராகில்

 

 

நகரம்

சீமெந்துக் காடு

தொலை தூரம் பக்கத்து வீடு

 

கிராமம் சோலை

உள் அறைக்குள் பூத்திருக்கும்

பக்கத்து வீடு

 

பக்கத்து வீட்டோடு

பகை கொண்டவன்

மனிதப் படியிலிருந்து கீழ் இறங்கியவன்

 

தாகமென்றால்

கிணற்றோடு வரும்

பக்கத்துவீடு

 

பக்கத்து வீடு

சுவாசம்

ஒவ்வொரு நாளும் பலகறி வீட்டில்

 

புன்னகை கண்ணீர்

பரிமாறுகின்ற பாத்திரம்

பக்கத்து வீடு

 

அடுப்பு எரியவில்லை

அடுத்த வீட்டு நெருப்பில்

உனக்காகப் பொங்கும் பால்

 

பக்கத்து வீடுதான்

முதல் முற்றம் சுற்றம்

 

பக்கத்து வீடு

லட்டு

இனிக்கத் தொடங்கும்  இதய நா

 

நரம்புகளில் தாலாட்டு ஒலிக்கும்

பக்கத்து வீடு

தாய் மடி போலானால்

 

தூக்கம் தைக்கும்

பக்கத்து வீடு

முள்ளென்றால்

 

பக்கத்து வீட்டோடு காதல் உண்டெனில்

ஒவ்வொரு நாளும்

மகிழ்ச்சிக்கு நடக்கும்

திருமணம்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *