RAJAJI.....!

”அடியேன் இரண்டு ஓவியங்கள் கிண்டியில் பொறியியல் படிக்கும் காலத்தில் வரைந்தேன்….இருவருமே மூதறிஞர்கள்….ஒருவர் ‘’ராஜாஜி’’….மற்றவர் ‘’சோ ராமாசாமி’’ அவர்கள்….என்னிடம் இருப்பது மூதறிஞர் திரு.ராஜாஜி அவர்களின் ஓவியம்(இணைத்துள்ளேன்)….திரு. சோ சார் அவர்களின் ஓவியம் டாக்டர் ஜெகதீஸன் சாரிடம் உள்ளது….. ஓவியத்தில் கையெழுத்து வாங்கி தருவதாக ஓவியத்தை வாங்கிச் சென்ற எங்கள் குடும்ப வைத்தியர்(டாக்டர் ஜெகதீஸன் ‘’சோ சாருக்கு’’ நெருங்கியவர்) இப்போது சொர்கத்தில் உள்ளார்(’’டாக்டர் சோ வந்துருக்கார் சொர்கத்திற்கு கையெழுத்து வாங்கி வையுங்கள் அடியேன் வருகையில் கலெக்ட் செய்து கொள்கிறேன்’’)திரு சோ. சார் அவர்களின் ஓவியத்தை மீண்டும் வரைந்தேன்(இணைத்துள்ளேன்)…..’’ராஜாஜி’’ ஓவியத்தில் வாங்கித் தருவதாகச் சொன்ன என் தாத்தாவும் சொர்கம் சென்று விட்டார்….!’’ராஜாஜி’’ ‘’சோ’’ ’’ஜெகதீஸன்’’ மூவரும் சொர்கம் சென்றுவிட்டார்கள்…இருவரின் கையெழுத்துதான் இல்லை அந்தோ….!

Cho....8888....!

எனது ‘’சாக்லேட்-கிருஷ்ணா’’ ‘’சோ சாரின்’’ ‘’சம்பவாமி யுகே யுகே’’, வாலி சாரின் ‘’கலியுகக் கண்ணன்’’ inspiration என்றால் மிகையாகாது….திரு.ராஜாஜியும், திரு வெங்கடகிருஷ்ணைய்யங்காரும்(எனது தாத்தா) சொர்கத்தில் ‘’ஸ்வந்திரா பார்ட்டி’’ அமைக்கச் சென்றுள்ளார்கள்….அடியேன் பூமியில்….!

வாழ்க மூதறிஞர்கள் இருவரும்….. வளர்க அவரது புகழ்….

என்னால் முடிந்த இரங்கற்பா சோ சாருக்கு….

‘’சே’’என்(று) எவருமே சொல்லமாட் டார்துக்ளக்
‘’சோ’’என்ற ராமசாமி சொல்வதை; -’’நா’’வென்ற
நாடகத் தந்தை நயத்தகு வாக்கது
ஆடகச் செம்பொன் அழகு’’….கிரேசி மோகன்….!

விவேகா ஃபைன் -ஆர்ட்ஸ் பூஜைப் பாடலில் ‘’ஆடகச் செம்பொன் மேனி முருகனே ‘’(நீலு அண்ணா குரல் தனியாகக் கேட்கும்) என்ற வரி வரும்….முருகரும் அழகு ,சோ சாரின் எழுத்தும் அழகு’’…..!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *