வல்லமையின் மறுவடிவம் பாரதி!

0

கவிஞர் இடக்கரத்தான்

1449822241-4574

வல்லமையில் மறுவடிவம் பாரதி 

நரிகள் வெள்ளையர்க்குத் தானவனும் பேரிடி 

அடிமைப் பள்ளமதில் நமைத்தள்ளிப் படுத்தியவர் தமைப்பதறச் செய்தவன் – பாட்டால் – வைதவன்!
அனைவர்க்கும் வேண்டும்தான் வல்லமை – எதிர்ப்பு அஞ்சிஓடும் வண்ணம்திடச் சொல்லமை – செய்யின் உனைத்துரத்தும் எதிர்ப்பலையை உன்காலில் விழச்செய்வாய் என்றான் – மனதில – நின்றான்!
பாரதியின் பாட்டனைத்தும் நெருப்பு – வெள்ளைப் பதர்களுக்கு அவனென்றால் வெறுப்பு – பெரும் பாரதிரும் பாட்டாலும் பரங்கியரை ஆட்டிவைத்துக் காட்டினான் – துரத்தி – ஓட்டினான்!
ரௌத்திரமும் கொள்ளுமெனச் சொன்னவன் – பாட்டு ரதமோட்டி வலம்வந்த தென்னவன் – பெரும் ஔவியமும் கொண்டவெள்ளை அரக்கர்தமை நடுநடுங்கச் செய்தவன் – வாகை – கொய்தவன்!
தோட்டாக்கள் எனும்அவனின் பாட்டு – வெள்ளைத் துரைமார்க்கு வைத்ததுதான் வேட்டு – பாட்டு நாட்டோரை உந்தவைக்க நரிகளெனும் பரங்கியரும் பணிந்தார் – ஓடத் – துணிந்தார்!
பாட்டுக்கு ஒருபுலவன் பாரதி – விடுதலைப் போரில்ரதம் செலுத்தியநற் சாரதி – எங்கள் நாட்டின்பெரும் செல்வமதை நக்குபவர் நாவறுப்பேன் என்றவன் – பாட்டால் – கொன்றவன்!
பாரதியை நெஞ்சிலென்றும் வைப்போம் – அவன் புனிதமொழி தமைவணங்கி மெய்ப்போம் – நமை யாரெதிர்க்க வந்திடினும் அச்சமில்லை அச்சமில்லை சொல்லுவோம் – நிமிர்ந்து – செல்லுவோம்!
06.08.2017

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *