கவிஞர் இடக்கரத்தான்

இழிவுகளும் நாட்டினிலும் பெருகுது 

பெரும் இடரதனால் நாட்டின்வளம் கருகுது 

மிக அழிவதனை அன்னைநாடு அணைப்பதற்கு

முன்னதனைக் காக்கனும் – துயர் – போக்கனும்!
அண்ணல்காந்தி தந்தவுயர் விடுதலை 

தனை அடகுவைத்து வளர்க்கின்றார் கெடுதலை 

பெரும் தன்னலத்தார் அரசியலால் தாய்நாடு தள்ளாடி வீழுது

 துயர் – சு+ழுது!
காந்தியவர் வாரிசெனச் சொல்லுறார் 

அதில் கருணையதும் இன்றியுமே கொல்லுறார் 

மிக வாந்தியுமே எடுத்தாற்போல் வகையற்ற துயராட்சி நடத்துறார் 

காலம் – கடத்துறார்!
அவசரக் கோலமெனும் திட்டம் – தந்த அலங்கோலத் தால்கண்டோம் நட்டம்

 பெரும் நவரச நாயகனாய் நடித்தேய்க்கும் தாடிமிக மோசம்

 வெற்று – கோஷம்!
ஊர்ஊராய் சுற்றியுமே திரிவார்

மிக உத்தமராய் காட்டியுமே வருவார்

 உற்றுப் பாரெந்தன் நடிப்பதனை பாரனைத்தும்

போற்றுதெனை என்கிறார் – நாட்டைத் – தின்கிறார்!
தாமரையை வளர்க்கவுமே எண்ணுறார் 

ஆட்சித் தளவாடத் தால்துயரும் பண்ணுறார் 

பெரும் பு+மறையும் நாகமெனப் பெருந்தீங்கை

மறைந்தவரும் செய்யுறார் வாகை – கொய்யுறார்!

தூஙகும்வரை தொடையில்கயிறு திரிப்பார் 

நம் தயவாலும் ஜெயித்துமிகச் சிரிப்பார் 

துயர் தாங்குதற்கா நாம்பிறந்தோம்?

துணிந்தெழுந்து நாம்புயலாய் பாயனும் – அவலம் – ஓயனும்!
08.08.2017

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *