எல்லாமே தப்புதான்
ரா.பார்த்தசாரதி
தெரிந்தே குப்பையை தெருவில் போடுகிறாய் !
குப்பையை தொட்டியில் போடவேண்டும் என அறிந்திருப்பாய் !
வீட்டைப் பெருக்கி குப்பையை தெருவில் போடுகின்றாய் !
குப்பை தொட்டி இருந்தும், தொட்டியின் பக்கத்தில் போடுகின்றாய் !
பிளாஸ்டிக் கழிவையும், மிச்ச மீதிகளையும் வீதிக் கால்வாயில் போடுகின்றாய்
கழிப்பறையிலும் , சாக்கடையிலும் போட்டு தண்ணீர் ஊற்றிவிடுகின்றாய் ,
கட்டிட இடி பாடுகளை கொட்டி, தண்ணீர் வாராமல் வீட்டை மேடாக்குகிறாய்
சுயநலத்துடன் உன் வீட்டை தண்ணீர் புகாமல் தற்காத்துக் கொள்கின்றாய் !
ஏரி ,ஆறு, குளங்களை ஆக்கிரமித்து பிளாட் போடுகிறோம்,
பள்ளமான இடத்தில் கட்டிடங்கள் கட்டிக்கொள்கின்றோம்,
விதி மீறல்களுக்கும், ஊழல்களுக்கும், இலஞ்சத்திற்கும் துணை போகிறோம் !
அதிகாரத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் அடி பணிகின்றோம் !
வெள்ளம் வந்தபோதுதான் நமது இடத்தின் நிலைமை உணர்ந்தோம்,
எல்லா பொருட்களை இழந்து நடுதெருவில் நின்றதை அறிந்தோம்,
சாக்கடை நீரும், குடிநீரும் கலந்து மக்களுக்கு ஊறு விளைவித்ததே,
அரசாங்கமும், மருத்துவ முகாம் மூலம் துன்பங்களை தீர்த்ததே !
மக்கள் பட்ட கஷ்டங்களை எல்லோரும் அறிவர்
சிறு தொகை கொடுத்து மக்களை திருப்தி படுத்தினர் ,
சிறுதொகை அளித்ததால் இழந்ததை மறந்தனர் ,
பெற்றும், நம் அரசாங்கத்தையும்,அரசியலையும்,குறை கூறினர்!
வரும் தேர்தலுக்கா, மக்களின் நல்வாழ்விற்கா
இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுவதா !
எதனையும் திட்ட மிட்டு செய்வது நல்லதே
திட்டம் இல்லாமல் எதையும் அரசாங்கம் செய்யாதே !
நமக்கு தெரிந்தது எல்லாம் பணம் கொடுத்தால் மகிழ்ச்சி
இல்லாவிடின் அரசாங்கத்தையும், அரசியலையும் இகழ்கின்றோம்
ஊழலுக்கும் இலஞ்சத்திற்கும் துணை போகிறோம்
என்றுமே உணர்வதில்லை எல்லாமே தப்புதான் என்று.!