ரா.பார்த்தசாரதி

 

உலை அரிசிக்கு தெரிவதில்லை – அது

உருமாறி பலரின் பசியாற்றப் போவது!

 

ஊறும் அரிசிக்கு தெரிவதில்லை – அது

அரைபட்டு பின் அடுப்புக்கு போவது!

 

அட்சதை அரிசிக்கு தெரிவதில்லை – அது

மங்கலப் பொருளாகி ஆசிர்வதிக்கப் போவது!

 

வாய்க்கரிசிக்கு தெரிவதில்லை – அது

சந்ததிகள் கையால் சவத்தின் வாய்க்கு போவது!

 

ரேஷன் அரிசிக்கு தெரிவதில்லை – அது

ஏழை வீட்டில் மட்டுமே உணவாகப் போவது!

 

அரிசி ஒன்று தான் – ஆனால்,

பயன் வேறு வேறு!

 

மலர்கள்  ஒன்று சேர்ந்து   திருமண மாலையாகிறது

மலர்கள் சிதறி சவ ஊர்வலத்தில் மிதிபட்டு பாழாகிறது !

 

மாவிலை தோரணமாகி கல்யாண வீட்டில் தொங்குகிறது

மாவிலை காய்ந்தால் சருகாகி ,எருவாகி பூமிக்குள் அடங்குது !

 

தென்னை மரம் சுவையான இளநீர் தந்து தாகம் தீர்க்கிறது

அதன் ஓலையோ சவத்திற்கு படுக்கையாகிறது !

 

வாழ்க்கை ஒன்று தான் – அது

வாழ்பவனையும், வாழும் விதத்தையும் பொறுத்தது!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *