ஆடு நனைய அழுகின்ற ஓநாய்
வாடும் மனமாம் வெறும்தாளில் –
கூடாம் உடலில் உயிரைக் கொடுத்த
மடலோ வியனே கடவுள்காண்….!

ஆர்வம் முறுக்கிட ஆசை கிழித்திட
போர்வை மனமோ நார்நாராம்
கந்தையா னாலும் கசக்கிக் கட்டிட
புந்தியை ஈசா பிழிந்திடுவாய்….!

கைலாஸங்கள் வைகுண்டங்கள்
காண்போர் கண்ணுக்கு மெய்யாகும்
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை….

மதங்கள் நூறு ஜாதிகள் கோடி
ஆதி அந்தமும் ஒன்றல்லோ
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை…!

பூரணத்தைப் பரிபூரணமாக
ஜீரணம் செய்யும் சூரணமே
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை….கிரேசி மோகன்….(தொடரலாம்….!)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *